November 23, 2007

ஊடகங்களின் உள்ளடி வேலை

ஊடகங்களின் உள்ளடி வேலை
-ஜி.இராமகிருஷ்ணன்
“நந்திகிராமில் பிரச்சனைக்கு காரணமே ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையின் பிடிவாதம்தான்”- தினமணி, 16.11.2007

“நந்திகிராமம், ஜாலியன் வாலாபாக் படு கொலையை ஞாபகப்படுத்தும் இன்னொரு இட மாக மாறியிருக்கிறது”- தினகரன், 18.11.2007

“நிலம் கையகப்படுத்துவதை எதிர்க்க முனை பவர்கள் கையாண்ட வழிமுறைகள் சற்றும் ஏற்க முடியாதவை; அவை அதிகாரத்தையே அர்த்தமற் றதாக்கி, சட்டம் - ஒழுங்கை தூசியாக மதித்து அவர்கள் செய்தவை குற்றங்கள். இப்போது மேற்கு வங்க அரசு அடியாட்களை ஏவி போலீஸ் துணை யுடன் புரிந்திருப்பதும் அராஜகமே! மீட்பு பணி என்ற பெயரில் மீளாத அவப்பெயரை பெற்றிருக்கிறது மார்க்சிஸ்ட் அரசு”- துக்ளக், 28.11.2007

“நந்திகிராம் கிராமங்களை மீண்டும் கைப்பற் றுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் முழுவதும் சட்டவிரோதமானது; ஏற்றுக் கொள்ள முடியாதது”- கோபால கிருஷ்ண காந்தி, மேற்குவங்க ஆளுநர், இந்து - 10.11.2007

இவை தவிர பல தொலைக்காட்சிகளும் நந்தி கிராமை பற்றி ‘மேற்குவங்க அரசு நந்திகிராமத் தில் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எடுத்த முயற்சியை எதிர்த்து விவசாயிகள் போராடுகிறார் கள்’ என்று திரித்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

உண்மை என்ன?

நந்திகிராமத்தில் வேதியியல் தொழில் வளாகம் துவங்குவதற்கு ஒருபகுதி மக்கள் மத்தியில் எதிர்ப்பு வந்த பிறகு கடந்த பிப்ரவரி மாதம் நந்தி கிராமத்தில் தொழில் வளாகம் துவங்குவதை கைவிடுவதென மாநில அரசு முடிவு செய்து அறி வித்து விட்டது. இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வும் இதே கருத்தை முடிவாக அறிவித்தது. இருப் பினும், பூமி பாதுகாப்பு அமைப்பு என்ற பெயரில் மம்தா பானர்ஜி கட்சியைச் சேர்ந்தவர்களும், மாவோயிஸ்ட் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த வர்களும் மற்றும் சில அமைப்புகளும் நந்திகிராம் உள்ளிட்ட பல கிராமங்களை ஆக்கிரமிப்பு செய்து அக்கிராமங்களில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி குடும்பங்களைச் சேர்ந்த குழந்தை கள், முதியவர்கள் உள்ளிட்ட 3500க்கும் மேற்பட் டோரை அடித்து விரட்டி விட்டனர். இவர்கள் கடந்த பல மாதங்களாக நிவாரண முகாம்களில் அகதிகளாக தங்கி இருந்தனர். இதனால் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து நந்திகிராமம் பகுதியில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல இயலவில்லை, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கூட போட இயலவில்லை. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தங்களுடைய வழக்கமான பணி யில் ஈடுபட முடியவில்லை. ஒட்டுமொத்தத்தில் அப்பகுதியை மேற்குவங்கத்திலிருந்து துண்டிக் கப்பட்ட ஒரு பகுதியாக மாற்றி ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்ட் கும்பல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இத்தகைய நிலைமையை மாற்று வதற்கு மாநில காவல்துறையினர் சென்றபோது தான் துரதிருஷ்டவசமாக 14 பேர் இறந்த வருந் தத்தக்க சம்பவம் நிகழ்ந்தது. இதற்கு பிறகு அரசு பல அமைதி முயற்சிகளை மேற்கொண்ட போதும், கிராமங்களை விட்டு வெளியேறியவர்கள் திரும்ப இயலாத நிலை நீடித்தது. இந்நிலையில்தான் விரட்டப்பட்ட 3500 பேரும் சில தினங்களுக்கு முன்புதான் கிராமங்களுக்கு திரும்பினர். இப் போது சகஜ வாழ்க்கை அங்கே நிலவி வருகிறது.

வெளியேறியவர்கள் மீண்டும் கிராமங்களுக்கு வந்திருப்பதை, ‘கிராமங்களை மீண்டும் கைப்பற்று வது சட்ட விரோதமானது’ என்று மாநில ஆளுநர் வர்ணித்திருக்கிறார். ‘மீண்டும் கைப்பற்றுவது’ சட்டவிரோதம் என்றால், உள்ளூர்வாசிகளை பல வந்தமாக வெளியேற்றிவிட்டு, மாவோயிஸ்ட்டு களும், மம்தா கட்சியைச் சேர்ந்தவர்களும் நந்தி கிராமை கைப்பற்றியதை சட்டபூர்வமானதென ஆளுநர் கூறுகிறாரா? ஆளுநர் தனது வரம்பை மீறி விட்டார் என டெலிகிராப், இந்து போன்ற நாளேடுகளே விமர்சித்திருக்கின்றன.

18.11.2007 தேதியிட்ட தினகரனில் வெளியான ஒரு கட்டுரையில், ‘நந்திகிராமத்தில் நிலவும் நிலைமையை ஜாலியன் வாலாபாக்குக்கு ஒப் பிட்டு எழுதப்பட்டிருக்கிறது’

இந்த ஆண்டு ஜனவரியில் துவங்கி, நந்தி கிராம் பகுதியில் இதுவரையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 30 தோழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கடந்த 9 மாதங்களாக 3500 பேர் தங்களது சொந்த கிராமங்களிலிருந்து வெளியேறி வேறிடங்களில் அகதிகளாக வசித்து வந்த நிலைமை இருந்தது. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத ‘தினகரன்’ நாளேடு வெளியேறியவர்கள் வீடு திரும்பியதைத் தான் ஜாலியன் வாலாபாக்குடன் ஒப்பிட்டு எழுது கிறது. நந்திகிராமத்தில் நிலம் எடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிப்ரவரி மாதமே மேற்குவங்க அரசு அறிவித்த பிறகும், இன்னமும் நந்திகிராமத்தில் நிலமெடுப்பதற்கு மேற்குவங்க அரசு முயற்சிப்பதாகவும், அதை எதிர்த்து மக்கள் போராடுவதாகவும் உண்மைக்கு புறம்பாக எழுதுவது பத்திரிகை தர்மமாகுமா?

துக்ளக் கருத்து பற்றி விளக்கமளிக்கத் தேவையில்லை! கம்யூனிஸ்ட் எதிர்ப்பு கண்ணை மறைக்க அவதூறு பரப்புவதே அதன் வேலை.

ஒரு நாட்டில் ஜனநாயகத்தை காக்கக்கூடிய தூண்களில் ஒன்றாக ஊடகங்கள் உள்ளன. அரசு நிர்வாகம், நாடாளுமன்றம், நீதித்துறை ஆகிய மூன்று தூண்களும் ஜனநாயகத்தை காக்கத் தவ றுகிறபோது, நடுநிலையாக நின்று ஜனநாயகத் தின் நான்காவது தூணாக ஊடகங்கள் செயல்பட வேண்டும். ஆனால், ஊடகங்களில் ஒரு பகுதி திசை மாறி கம்யூனிஸ்ட்டுகள் மீது வெறுப்பை உமிழ்ந்து வருகின்றன.

இத்தகைய போக்கு வரலாற்றில் ஒன்றும் புதிதல்ல.

1971ல் துவங்கி 6 ஆண்டு காலம் காங்கிரஸ் தலைமையில் ஒரு அரை பாசிச ஆட்சி மேற்குவங் கத்தில் நடந்ததையும் 3000க்கும் மேற்பட்ட மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் படுகொலை செய்யப்பட்டதையும் ஊடகங்கள் இதுவரையில் உண்மையாக ஏற்கவில்லை. மேற்குவங்கத்தில் அரை பாசிச ஆட்சி துவங்கியபோது, இது மேற்கு வங்கத்தோடு நிற்காது. மற்ற மாநிலங்களுக்கும் பரவக்கூடிய ஆபத்து உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9வது கட்சி காங்கிரஸ் தீர் மானம் கூறியது. இதைத்தான் அவசர நிலை பிரக டனம் என்ற கசப்பான அனுபவத்தை நாடு முழு வதும் மக்கள் சந்தித்தனர். மறைந்த ஜெயப்பிர காஷ் நாராயணன் கூட, முதலில் நம்ப மறுத்து மேற்குவங்கத்திற்கு அவர் சென்றபோது, அவரு டைய காரை தாக்குவதற்கு காங்கிரஸ் கட்சியினர் முயற்சித்தபோது அவர் புரிந்து கொண்டார்.

1968 டிசம்பர் 25ஆம் நாள் வெண்மணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குழந் தைகள், முதியோர்கள், பெண்கள் உள்ளிட்டு 44 தலித்துகள் நிலச் சுவான்தார்கள் தலைமையிலான குண்டர்களால் உயிரோடு எரிக்கப்பட்ட கோர மான நிகழ்ச்சியை டிசம்பர் 27 ஆம் நாள் தினமணி “கிசான்களுக்கிடையில் மோதல்- 42 பேர் பலி” என உண்மையை மறைத்து செய்தியாக வெளியிட்டது. வெண்மணி சம்பவத்தைத் தொடர்ந்து தினமணி தீட்டிய தலையங்கத்தில் பக்கிரிசாமி என்ற ஒரு வரை கம்யூனிஸ்ட்டுகள் திட்டமிட்டு செய்த கொலையின் எதிர்வினைதான் 44 பேர் பலி; எனவே, எண்ணிக்கையை வைத்து குழம்பி விடக் கூடாது என 44 பேர் உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்தி ஏ.என். சிவராமன் தீட்டிய தலையங்கத்தை கம்யூனிஸ்ட்டுகளால் எப்படி மறக்க முடியும்.

இத்தகைய திட்டமிட்ட நிகழ்ச்சிகளை பரி சீலிக்கிறபோது, 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கக் கூடிய மேற்குவங்க இடது முன்னணி அரசையும்; அமெரிக்க ஏகாதிபத்தியத்தை உறுதியாக சமர சமற்ற முறையில் எதிர்த்து போராடி வரும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது சாரி இயக்கத்தையும் பிளவுபடுத்த, அழிக்க ஏகா திபத்தியம் பின்னாலிருக்கிறதோ என்ற ஐயம் இயல்பாகவே ஏற்படுகிறது.

இத்தகைய கருத்தை 22.11.2007 அன்று ‘இந்து’ பத்திரிகையில் வெளியான ஒரு செய்தி ஊர்ஜிதப்படுத்துகிறது.

மேற்குவங்க நண்பர்களுக்கு வேண்டுகோள் என்ற தலைப்பில், அமெரிக்காவைச் சேர்ந்த சாம்ஸ்கி உள்ளிட்ட தலைசிறந்த, மனித நேய மிக்க உலகளவிலான அறிவு ஜீவிகள் வெளியிட் டிருக்கக் கூடிய அறிக்கையில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளனர்.

“உலக சக்திகளின் இன்றைய வலிமை நிலைகள் காரணமாக, இடதுசாரி சக்திகளைத் துண்டாடுவது ஒரு மூர்க்கத்தனமான பாதிப்பு களுக்கு இட்டுச் சென்றுவிடக்கூடும். ஒரு நாட்டின் (இராக்) அரசைத் தகர்த்த ஒரு உலக மகா ஆதிக்க சக்தி, இப்போது இன்னொரு நாட் டையும் (ஈரான்) தகர்ப்பதற்குத் தயாராகி வருவ தைப் பார்க்கிறோம். எனவே, வேறுபாட்டிற்கான அடிப்படைகள் இனியும் இல்லை என்ற நிலை யில், இது பிரிந்து நிற்பதற்கான தருணம் அல்ல.”

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கை ஒன்றும் புதிதல்ல. 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் மேற்குவங்கத்திலும், கேரளாவிலும் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையி லான கூட்டணி வெற்றி பெற்று விடக்கூடாது என் பதற்காக சி.ஐ.ஏ. யாருக்கெல்லாம் நிதி கொடுத் தது என்பது வரலாறு.

இந்திய தேசம் விடுதலையடைந்து 60 ஆண் டுகள் ஆகியும் விவசாயிகள் தற்கொலை, வறுமை, வேலையின்மை போன்று பிரச்சனைகள் தொடர் கிறபோது, ஒரு இடதுசாரி மாற்று உருவாவதை தடுக்கவே கம்யூனிச விரோதிகள் முயற்சிக்கின் றனர். இடதுசாரிகளும், ஜனநாயகவாதிகளும், மதச்சார்பற்ற சக்திகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது.
----------------------------
மாற்றுக்கருத்து உள்ளவர்கள் எனக்கு எழுதவும்(ezhilans@rediffmail.com)

July 12, 2007

செகாவத்தின் இலட்சனம் !


ஒட்டுமொத்த நாடே அதிர்ச்சியுறக் கூடிய வகையில், ஐக்கிய முற்போக்குக் கூட் டணி வேட்பாளருக்கு எதிராக பாஜகவினர் கட்டவிழ்த்து விட்டுள்ள மிகவும் கீழ்த்தரமான முறையி லான பிரச்சாரம் மிகமிகத் தாழ்ந்த நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. நாட்டின் மிக உயர்ந்த ஸ்தானமான, குடியரசுத் தலைமைப்பதவிக்குப் போட்டியிடுபவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற் படுத்தும் விதத்தில் அவர் மீது சேறை அள்ளி வீசு வதன் மூலம் உண்மையில் தங்களையே மிகவும் தரம் தாழ்த்திக் கொள்கிறார்கள்.


நாட்டின் அரசமைப்புச் சட் டத்தின் மிக உயர்ந்த அலுவலகமான குடியரசுத் தலைமையகத்திற்கு எந்தஅளவிற்கு மிகக் குறைவாக பாஜக மதிப்பளிக்கிறது என்பதையே இது காட்டுகிறது.


இதில் மிகவும் மோசமான விஷயம் என்னவெனில், பாஜக தங்கள் வேட்பாளரைப் பாதுகாக்கும் வண்ணம் கூறும் விவரங்கள்தான்.


செகாவத், 1942 இல் காவல்துறையில் பயிற்சி உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார் என்று பாஜக செய்தித் தொடர் பாளர், சுஷ்மா ஸ்வராஜ், நாட்டிற்குத் தெரிவித்தி ருக்கிறார். அதுமட்டுமல்ல, 1948இல் அவர் பதவி யிலிருந்து விடுவிக்கப்பட்டபோது அவருக்கு அளிக்கப்பட்ட பணிவிடுவிப்புக் குறிப்பையும் தாக்கல் செய்திருக்கிறார். அதில் செகாவத் காவல் உதவி ஆய்வாளராக இருந்த போது ஆற்றிய பங்களிப்பு குறித்து மிகவும் போற் றத்தக்க முறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ் வாறு செய்திருப்பதன் மூலம், சுஷ்மா ஸ்வராஜ், செகாவத்தின் வேட்புமனுவுக்குத் தீங்கு செய்தி ருப்பதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ நாட்டில் 1942இல் தொடங்கப்பட்டது என் பதை நாட்டில் உள்ள அனைவரும் அறிவார்கள். அவ்வியக்கத்தின்போது, லட்சக்கணக்கான சுதந் திரப் போராட்ட வீரர்கள் காவல்துறையினரின் கடும் சித்ரவதைக்கு உள்ளானார்கள். இந்தக் காலகட்டத்தில் ஒருவர் காவல்துறையில் சேவகம் செய்தார் என்பதற்கும், சுதந்திரம் பெற்றபின் அவர் தன்னுடைய பணிக்காலத்தில் மிகவும் சிறப்பாகப் பணியாற்றினார் என்ற குறிப்புடன் பணியிலிருந்து வெளிவந்தார் என்பதற்கும் உண்மையில் பொருள் என்ன? செகாவத் காவல்துறையில் சேவகம் செய்ததன் மூலமாக, இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு எதிராக செயல்பட்டார் என்று பொருள்படுவதை உள்ளபடியே சுஷ்மா ஸ்வராஜ் அறிந்திருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை.


இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் RSS இயக்கத்தின் பங்களிப்பு எவ்வாறாக இருந்ததென்பது அனைவரும் அறிந்த ரகசியமே.


1942 வெள்ளையனே வெளியேறு இயக் கத்தின்போது, பம்பாய் உள்துறை, கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறது: “சங் பரிவாரம், சட்டத்திற்குட் பட்டு துளியும் பிறழாமல் செயல்படுகிறது. குறிப்பாக 1942 ஆகஸ்ட்டில் நடைபெற்ற கிளர்ச் சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற் கிறது.”சுஷ்மா ஸ்வராஜ், செகாவத்தை இவ்வாறு தூக்கிநிறுத்துவதன் மூலம், விடுதலை போராட்டத் தின்போது RSS ஆற்றிய பங்களிப்பினை சரியென்று ஒப்புக் கொள்கிறார் என்றே தோன்றுகிறது.


எனவே, பாஜக, ஐக்கிய முற்போக்குக் கூட் டணி வேட்பாளருக்கு எதிராக சேறை வாரி இறைப்பதென்பது, உண்மையில் தற்போதைய துணைக் குடியரசுத் தலைவராகவுள்ள, தன் சொந்த வேட்பாளருக்காக, பண்பற்ற கருத்து மாறுபாடுகளை உருவாக்குவதற்கே உதவுகிறது.


June 17, 2007

சென்னை ஐ.ஐ.டி.யில் தொடரும் வர்ணாசிரம அதர்மம்

மத்திய அரசு நிதியில் செயல்படும் கல்வி நிறுவனங்களில் வடக்கில் தலித்துகள் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என்பது அநேகமாக அனை வரும் அறிந்த உண்மை. ஆனால், இட ஒதுக்கீட் டுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்ற தமிழகத் தில் உள்ள சென்னை ஐ.ஐ.டி.-யிலும் தலித்துகள் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினர் மிகவும் இழிவாக நடத்தப்படுகின்றனர் என்பதை இவ்வார ‘டெகல்கா’ வார இதழ் தோலுரித்துக் காட்டியிருக்கிறது.

இக்கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களில் தலித்துகள் 11.9 சதவீதத்தினர் மட்டுமே யாவர். உயர்கல்வி பயில்வோரில் இந்த சதவீதம் இன்னும் குறைவாகும். உதாரணமாக எம்.எஸ். (ஆய்வு) மாணவர்களில் 2.3 சதவீதமும், பி.எச்டி. மாணவர்களில் 5.89 சதவீதமுமே தலித்துகளாவர். மொத்தம் இந்நிறுவனத்தில் பயிலும் 4687 மாண வர்களில் 559 பேர்கள் மட்டுமே - அதாவது 8.3 சதவீதத்தினரே - தலித்துகள் ஆவார்கள். சுமார் 250 ஹெக்டேர் நிலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் இக்கல்வி நிறுவனத்தின் துறை களில் ஆசிரியர்களும் மாணவர்களும் பிரா மணர்களே ஆவார்கள்.

தலித்துகளின் உரிமைகளுக்காகக் கடுமையாகப் போராடுபவரும் இந்நிறுவனத்தில் கணிதத்துறையில் உதவிப் பேரா சிரியராகப் பணியாற்றுபவருமான வசந்தாகந்த சாமி என்பவர், இங்குள்ள அனைத்துத்துறைகளி லும் பணியாற்றும் ஆசிரியர்களில் வெறும் நால்வர் மட்டுமே தலித்துகள் என்றும், இது மொத்த எண் ணிக்கையில் 0.86 சதவீதம் மட்டுமே என்றும் கூறுகிறார்.

அதேபோன்று பி.எச்டி. பட்டத்திற்குப் பதிவு செய் யப்பட்டுள்ள தலித் மாணவர்கள் மிகவும் கொடு மையாக நடத்தப்படுவதாகவும் வசந்தா கூறுகிறார். ஆராய்ச்சிப் படிப்பை அவர்கள் தொடர்ந்து கொண் டிருக்கும் போது திடீரென்று இடைநிலையில் ஆராய்ச்சிப் பாடத்தின் தலைப்பை மாற்றக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்றும், அவர்களை ஒழுங்காக முடிக்க விடுவதில்லை என்றும், எழுத்துத் தேர்வுகள் மற்றும் வாய்மொழித் தேர்வுகளி லும் அவர்களைத் தோல்வியடையச் செய்து விடுகிறார்கள். தலித் மாணவர்களைப் பொறுத்தவரைக் கும் ஐஐடி சூழல் மிகக் கொடுமையானதாகும் என்று வசந்தா மேலும் கூறுகிறார்.

இவ்வாறு வசந்தா தலித் மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதால் நிர்வாகத்திற்கு அவரைப் பார்த்தாலே கசப்பாக இருக்கிறது. எனவேதான் கடந்த பதினேழு ஆண்டுகளாக எவ் வித பதவி உயர்வும் இன்றி உதவிப் பேராசிரிய ராகவே அவர் உழன்று வருகிறார். சர்வதேச அள வில் அவர் பல சாதனைகளைப் படைத்திருந்த போதிலும், அவர் இதுவரை 640 ஆய்வுத் தாள்களை வெளியிட்டிருந்தபோதிலும் அதுபற்றியெல்லாம் நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை.

சுஜி தெப்பால் என்ற ஒரு மாணவி. இண்டர் மீடியட் தேர்வில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதி யியல் பாடங்களில் 94 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். அகில இந்திய அளவில் புகழ்பெற்ற ராஞ்சியில் உள்ள பிட்ஸ் நிறுவனத்திலும், பிலானி யில் உள்ள பிட்ஸ் நிறுவனத்திலும் கூட இவருக்கு இடம் கிடைத்தது. ஆயினும் இவர் சென்னை ஐஐடி-யில் படிக்க வேண்டும் என்று மிகவும் ஆவலுடன் இருந்ததால் அங்கு மட்டும் விண்ணப் பித்தார். ஆயினும் அவர் அந்த அளவிற்கு மதிப் பெண்களைப் பெற்றிருந்தும், அவர் தலித் என் பதால், தலித் மாணவர்களுக்கான “முற்பயிற்சி வகுப்பில்” (“யீசநயீயசயவடிசல உடிரசளந”) சேர்ந்து ஓராண்டு படிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தப்பட்டார். பயிற்சியின் முடிவில் வைக்கப்பட்ட தேர்வில் அவர் தோல்வியடைந்ததாக அறிவிக் கப்பட்டிருக்கிறார். என்னே கொடுமை!

ஐஐடி இயக்குநரான எம்.எஸ். ஆனந்த் ஒரு பிராமணர் என்றும் ஐஐடி-யில் துறைகளுக்கான தலைவர்களைத் தேர்வு செய்யும்போது தன் சொந்த சாதியிலிருந்தே தேர்வு செய்வார் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இரா.அன்பரசு குற்றம் சுமத்தியிருக்கிறார். இந்நிறுவனத் தின் மொத்தம் உள்ள ஆறு முதல்வர்களில் நால்வர் பிராமணர்கள் என்றும் அனைத்து விதி முறைகளையும் மீறி இவ்வாறு ஆனந்த் இவர்களை நியமனம் செய்திருக்கிறார் என்றும் அன்பரசு குற் றச்சாட்டில் மேலும் குறிப்பிட்டிருக்கிறார். தன் குற் றச்சாட்டை மத்திய மனிதவள அமைச்சர் அர் ஜூன் சிங்கை சந்தித்தபோது இரா.அன்பரசு தெரி வித்திருக்கிறார். அர்ஜூன் சிங் கும் இது குறித்து புலனாய்வுக்கு உத்தரவிடுவதாக உத்தரவாதம் அளித்துள்ளார். ஆனால் எதுவுமே நடைபெற வில்லை.

அன்பரசு குற்றச்சாட்டு குறித்து என்ன சொல் கிறீர்கள் என்று கேட்பதற்காக ‘டெகல்கா’ நிருபர் எம்.எஸ்.ஆனந்தையும் அவரது செயலாளரையும் சந்திக்க முயற் சித்திருக்கிறார். ஆயினும், இவை குறித்து கருத்துக் கூற இயக்குநர் கிடைக்க வில்லை என்று செயலாளர், நிருபரிடம் தெரிவித் துள்ளார்.

June 02, 2007

பாஜக அரசின் மக்கள் விரோத போக்கு

பாரதிய ஜனதா கட்சியின் அரசு என்பது மக்கள் பிரச்சனைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காது என்பதற்கு மேலும் ஒரு உதாரணமாகத் தான் ராஜஸ்தான் சம்பவங்கள் உள்ளன.

இம்மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான குஜ்ஜார் இனமக்கள் தங்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து விலக்கி பழங்குடியின மக்கள் பட்டி யலில் சேர்க்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதற்காக கடந்த ஓராண்டு காலமாகப் போராடியும் வருகின்றனர்.

2003 ஆம் ஆண்டு ராஜஸ்தான் சட்டப்பேர வைக்கு கடந்த தேர்தலில் குஜ்ஜார் இன மக்களை பழங்குடி இனப்பட்டியலில் சேர்ப்பதாக பாஜக வாக் குறுதி அளித்திருக்கிறது.கடந்த 4 ஆண்டுகளாக தந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் இப்போது நேரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக தேர்தல் அறிக்கையில் இப்படி எந்த வாக் குறுதியும் அளிக்கவில்லை என்று ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தராராஜேயும் அம்மாநில உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கட்டாரியாவும் அடித் துப் பேசுகிறார்கள். இது அச்சடித்த வாக்குறுதியாக இல்லாமல் இருக்கலாம். மேடைப்பேச்சுகளில் அளித்ததாகவும் இருக்கலாம் என்று பட்டிமண்டபம் நடத்திக் கொண்டிருக்கும் நேரமல்ல இது.

மக்களின் கோரிக்கையில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பதுதான் கேள்வி. குஜ்ஜார் இன மக்களின் வாழ்நிலைப்படி அவர்களை எஸ்.டி.யாக அறிவிப்பதில் தவறில்லை என்பதால்தான் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பணி வேகத்தில் நடப்பதால்தான் மக்கள் தங்களின் எதிர்ப்பைக் காட்ட அணிதிரண்டுள்ளனர். மூன்று மாவட்டங்களில் நடந்த போராட்டத்தில் சுமார் இரண்டு லட்சம் பேர் திரண்டிருந்தனர் என்றால் அவர்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சரோ உயர் நிலை அதிகாரியோ பேசியிருக்க வேண்டாமா என்ற கேள்வி நியாயமானது.

ஆனால்,மக்கள் ஒன்று பட்டு உரிமை கேட்பதை பாஜக அரசு விரும்புவதில்லை. ஏற்கெனவே ராஜஸ் தானில் ஏழை சிறுவிவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் பாசனத்திற்காகத் தண்ணீர் கோரி முற்றுகைப்போராட்டம் நடத்தினார்கள். இதனை சகித்துக் கொள்ள முடியாத பாஜக அரசு காவல் துறையை ஏவி கடுமையாகத் தாக்குதல் நடத்தி விவசாயிகளை படுகொலை செய்தது. விவ சாயிகள் மீது ஏற்கெனவே பாஜக அரசினால் ஏவி விடப்பட்ட போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், பாஜகவினர் கொஞ் சம் கூட வெட்கமில்லாமல் நந்தி கிராமத்தில் நடந்த நிகழ்வுகளை ஊதி பெரிதாக்கி அவதூறு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இப்போது அதையும் மிஞ்சி பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 14 பேரை பலி வாங்கியுள்ளது. மக்கள் பிரச்சனை மீதான பாஜக அரசின் அலட்சியப் போக்கை அராஜக அணுகுமுறையை இந்த சம்பவங்கள் காட்டுகின்றன. இந்த கட்சி மத்தி யில் ஆண்ட போதும் மற்ற சில மாநிலங்களில் ஆட்சி செய்த போதும் மக்கள் விரோதப் போக்கை கடைப்பிடித்ததால்தான் ஆட்சிக்கட்டிலிலிருந்து அகற்றப்படும் நிலை ஏற்பட்டது. இருந்தாலும் அதிலி ருந்து பாஜக பாடம் கற்றதாகத் தெரியவில்லை. இந்தக் கட்சிக்கு நிச்சயமாக எதிர் காலத்தில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள். இந்த துப்பாக்கிச் சூடு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும். பலி யானோர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

April 29, 2007

மனிதர் மலத்தை மனிதர் சுமக்கும் கொடுமை நீடிக்கலாமா?

தமிழகம் முழுவதும் துப்புரவு பணி யில் சுமார் ஒன்றரை லட்சம் தொழிலா ளர்கள் வேலை செய்து வருகின்றனர். பெரும்பாலான தொழிலாளர்கள் தாழ்த் தப்பட்ட மக்கள் ஆவர்.திண்டுக்கல் மாவட்டத்தில் மூன்று நகராட்சி,24 பேரூராட்சிகள், 306 ஊராட்சிகளில் சுமார் ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின் றனர். மனித மலத்தை மனிதன் கை யால் எடுத்து, தலையால் சுமக்கும் நிலையை 1995ம் ஆணடு தடை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணைய மும், இது மனித உரிமை மீறல் எனக் கூறியுள்ளது. ஆனால், அதன்பின்பும் இந்நிலை இந்தியாவின் பல மாநிலங்க ளிலும் தமிழகத்திலும் தொடர்வது சுதந்திர இந்திய நாட்டில் அவக்கேடான நிலையாகும்.
மலம் அள்ளும் பணியில் அருந்ததியர் மக்கள் தான் ஈடுபடுத்தப்படுகின் றனர் என்ற செய்தி நமது நாட்டிற்கே தலைக் குனிவை ஏற்படுத்துவதாகும்.கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரண்ட் லைன் என்ற ஆங்கில ஏடு ஆய்வு செய்து இந்திய நாட்டின் அவமா னம் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கட்டுரையில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித் துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அகரம்,தாடிக் கொம்பு,அம்மையநாயக்கனூர், ஆயக்குடி ஆகிய பேரூராட்சிகளில் நவீன கழிப்பறை இல்லாமல் எடுப்புக் கழிப்பறையில் மனித மலத்தை மனி தன் அள்ளும் நிலை உள்ளதாக மார்க் சிஸ்ட் கட்சி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பெரும்பாலான கிராமங் களிலும், சேரிப் பகுதிகளிலும், நகரங் களில் தெரு ஓரங்களில் உள்ள மலத்தை அள்ளும் பணியில் துப்புரவு தொழிலா ளர்கள் குறிப்பாக,அருந்ததியர் பெண் கள் ஈடுபடுத்தப்படுவதாக தெரியவந் துள்ளது. பழனி நகராட்சியில் 15 முதல் 24 வார்டுகள் வரையுள்ள பகுதிகளி லும், திண்டுக்கல்லில் கவாடக்காரத் தெரு, ஆர்.வி. நகர், காமராஜபுரம், லைன் தெரு, செல்லாண்டியம்மன் கோவில் தெரு, பிள்ளையார் பாளையம், கக்கன் நகர், திருமலைச்சாமிபுரம் ஆகிய பகுதி களில் உள்ள கணிசமான வீடுகளில் எடுப்பு கழிப்பறைகள்தான் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேற்குவங்க அரசு ஒரு விரிவான திட்டத்தை வகுத்து அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து அதனை முறையாக செயல்படுத்தி மனித மலத்தை மனி தன் அகற்றும் கொடுமையை அறவே தடுத்து நிறுத்தியுள்ளதை இம்மாநாடு பெருமையோடு சுட்டிக்காட்டுகிறது.

தமிழக அரசு ஆளுநர் உரையில் மனித மலத்தை மனிதன் சுமக்கும் கொடுமைக்கு முடிவு கட்டப்படும் என அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் இதனை முடிவுக்கு கொண்டு வர போதுமான நிதி ஒதுக்கப்பட வில்லை என்பதும் கவலை அளிக்கிறது.

உலகின் வேறு எந்த நாட்டிலும் இல் லாத சமூகக் கொடுமைதான் மனித மலத்தை மனிதனே கையால் அள்ளும் நிலையாகும். சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்களை இதில் இருந்து விடுவிப்பது அவசர அவசியமான கட மையாகும். தமிழ்நாட்டில் தீண்டாமை இல்லை. மனித மலத்தை மனிதன் சுமக்கும் கொடுமை இல்லை. சமூக ஒடுக்குமுறை இல்லை என்ற பெரு மையை நிலை நாட்டுவதை தமிழக அரசு உருவாக்க வேண்டும். இதற்காக முயற்சியையும், திட்டங்களையும் அவ சரத் தன்மையும் உருவாக்குமாறு தமி ழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள் கிறது. இந்த இழி நிலையை முடிவுக்கு கொண்டு விரைந்து செயல்பட முன்வரு மாறு அனைத்து ஜனநாயக இயக்கங் களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகிறது.

April 14, 2007

இட ஒதுக்கீடு - 27 சதம் - நீதிமன்றம் - திறமை வங்கி

க.கனகராஜ், தூத்துக்குடி

இந்திய அரசியல் சட்டத்தின் 16(14) வது பிரிவு பிற்பட்ட வகுப்பினருக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்கிறது. மண் டல் கமிஷன் பரிந்துரைக்கு முன்னரும் பிற்பட்ட வகுப்பினருக்கும் பல்வேறு மாநிலங்களிலும் இட ஒதுக்கீடு இருந்தே வந்தது. மண்டல் கமிஷன் பரிந் துரையை அமல்படுத்துவதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் 27 சதம் பிற்பட் டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க தீர்ப்பளித்தது. அது அமல்படுத்தப்பட்டு வருகிறது. பிற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியாக உயர்நிலை (ஊசநயஅல டயலநச) யிலுள்ளோருக்கு இவ்வொதுக் கீடு பொருந்தாவண்ணம் 27 சதம் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது.

27சதம் ஏன்?

1931க்குப் பிறகு ஜாதி ரீதியான கணக்கெடுப் புகள் நாடு முழுவதும் நடைபெறவில்லை. ஆயினும் மண்டல் கமிஷன் இதர பிற்பட்டோரின் மக்கள் தொகை 52 சதம் எனக் கணக்கிட்டுள்ளது. சுதந் திரத்திற்குப் பிறகு சர்தார் வல்லபாய் படேல் ஜாதி ரீதியான கணக்கெடுப்பைத் தடை செய்துவிட்டார். ஆயினம் பல மாநிலங்கள் தாங்களே இதர பிற்பட் டோர் பட்டியலைத் தயார் செய்து அதன் அடிப் படையில் இடஒதுக்கீட்டை கல்வியிலும் கூட அமல் படுத்தி வந்தன. இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டும் விரிவாக தயாரிக்கப்பட்ட கேள்வித் தாள் அடிப்படையிலுமே மண்டல் கமிஷன் இதர பிற்பட்டோர் 52 சதம் தரப்பட்டிருக்க வேண்டும். ஆயினும், நீதிமன்றம் இட ஒதுக்கீடு ஒட்டுமொத் தமாக 50 சதத்தை மீறக்கூடாது என தடை விதித்த தால் ஏற்கெனவே தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு (15+7.5) 22 சதம் இடஒதுக்கீடு அமலில் இருப்பதால் இதர பிற்பட்டோருக்கு 27 சதம் (கூட்டுத் தொகை 50க்குள்) என்று முடிவு செய்யப்பட்டது.

யாருக்கு என்ன வேலை?

ஜனநாயகத்தின் மூன்று பிரிவுகளான நாடாளு மன்றம், நிர்வாகம், நீதித்துறை இவற்றின் பணிகள் அரசியல் சட்டத்தால் தெளிவாக வரையறுக்கப்பட் டுள்ளன.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள் - சட்டங்களை உருவாக்கும்

நிர்வாகம் - உருவாக்கப்பட்ட சட்டத்தை அமல்படுத்தும்.

நீதிமன்றம் - சட்டத்தை வியாக்கியானம் செய்யும், அமலாக்கத்தை கண்காணிக்கும்.

சமீபகாலமாக நீதிமன்றம் இதர பிரிவுகளின் அதிகாரங்களை தானே எடுத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளதற்கான பல்வேறு உதார ணங்களைச் சொல்ல முடியும். நாடாளுமன்றத்தின் அதிகாரத்தில் தலையிட்டது அரசியல் சட்டத்தின் 9வது அட்டவணையில் உள்ளவையும் நீதித்துறை யின் பரிசீலனைக்குரியதே என்பது நிர்வாகத்தின் தலையீட்டில் கடைசி உதாரணம் உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் 27 சதம் இட ஒதுக்கீட்டிற்கு தடை.

இட ஒதுக்கீட்டிற்கு தடை சரியா?

1. உச்சநீதிமன்றத்தின் 9 பேர் கொண்ட பெஞ்ச் வேலை வாய்ப்பில் 27 சதம் இதர பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை அனுமதித்துள்ளது. வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அனுமதிப்போம். அதற்கு அடிப்படையான கல்வியில் அனுமதிக்க மாட்டோம் என்பது என்ன நியாயம்? கல்வி நிறுவ னங்களில் மாணவர் சேர்க்கையில் இடஒதுக் கீட்டை தடை செய்துள்ளது இருவர் கொண்ட பெஞ்ச்.

2. 27 சதம் இதர பிற்பட்ட வகுப்பினர் உள்ள னரா என்ற கேள்வி நியாயமெனில் எத்தனை சதவீ தம் உள்ளனரோ அத்தனை சதவீதமல்லவா இட ஒதுக்கீடு அனுமதிக்க வேண்டும். அதற்கு மட்டும் 50 சதம் என்கிற அடக்குமூடி எதற்கு?

3. 27சதம் வேலையில் இட ஒதுக்கீட்டை அனு மதித்திருப்பதும் உச்சநீதிமன்றம்தானே?

4. நாடாளுமன்றம் ஏறத்தாழ ஏகமனதாக (அர சியல் சட்ட திருத்தம் 93 அரசியல் சட்டத்தில் 15 (5) பிரிவை புதிதாக உருவாக்கியது. இதை நீதி மன்றம் கேள்விக்குள்ளாக்குமெனில் நாடாளு மன்றம் சட்டமன்றங்களின் வேலை என்ன?

இவையெல்லாம் நீதிமன்றம் அரசின் இதர அங்கங்களின் அதிகாரத்தில் தலையிடுவது என் பது மட்டுமல்ல. பணக்காரர்களுக்கும் முதலாளி களுக்கும் ஆதரவாக சேவகம் செய்ய முனைந் துள்ளதன் வெளிப்பாடே.

எனவேதான் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு தேசிய நீதி ஆணையம் வேண்டும் என வலி யுறுத்தியுள்ளது. நீதி ஆணையத்தின் உறுப்பினர் களாக பணியிலிருக்கும் நீதிபதிகள் மட்டும் இருந் தால் போதாது என வலியுறுத்தியுள்ளது.

இட ஒதுக்கீட்டை

எதிர்ப்போரின் வாதம்

வாதம் 1

நாட்டை சாதியாக பிரிவுபடுத்தும் நடவடிக்கை.

நியாயம் 1

இந்த வாதம் அபத்தமானது. நாட்டு மக்கள் எந்த அடிப்படையில் பின் தங்கியுள்ளனரோ அந்த அடிப்படையில்தானே நிவாரண நடவடிக்கை மேற் கொள்ள முடியும். பொருளாதார வரம்பு மட்டம் வைத்தால் ஏழை, பணக்காரன் என்ற பிரிவை உருவாக்காதா? வடகிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது நாட்டை பூகோள அடிப் படையில் பிளவுபடுத்தி விடுமா?

வாதம் 2

வாக்கு வங்கிக்காகவே இட ஒதுக்கீடு, நாங்கள் திறமை வங்கிக்காக வாதிடுகிறோம்.

நியாயம் 2

நல்ல வார்த்தை ஜாலம், உயர்கல்வி நிறுவனங் களில் படித்தோர் எத்தனை சதம் இந்திய அரசு நிறு வனங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரிகின்றனர். பெரும்பாலும் அன்னிய நாட் டிலும் இந்தியாவில் அன்னிய நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும்தானே பணிபுரிகின் றனர். அங்கெல்லாம் இட ஒதுக்கீடே கிடையாதே? எனவே இந்தக் கேள்வி தனக்கு போட்டி வரக் கூடாது என்பதற்காகத்தானே தவிர போட்டியில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு சலுகையளித்து தங் கள் வாய்ப்பு பறிக்கப்படும் என்பதால் அல்ல.

இவர்கள்தானே வேலைவாய்ப்பில் இட ஒதுக் கீடு அமல்படுத்தப்பட்டபோது முதலில் கல்வியில் ஒதுக்கீடு செய், பின்னர் வேலைவாய்ப்பில் செய்ய லாம் என்றவர்கள்.

இன்னும் சொல்லப்போனால் இப்போது பொதுப் போட்டியில் சேர்வோருக்கான எண்ணிக்கை குறைக்கப்படாமலேயே இட ஒதுக்கீடு அமல்படுத்த வகை செய்யப்பட்டிருக்கிறது. போட்டிக்கு புதியவர் கள் வருகிறார்கள் என்பதைத் தவிர ஏற்கெனவே போட்டியிடுவோர் போட்டியிலிருந்து நீக்கப்படுவது என்கிற பிரச்சனையே எழவில்லையே.

இதற்கு ஏதுவாகவே மத்திய அரசு கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது. குறிப்பாக, உயர் கல்விக்கு 34 சதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டவர் களுக்கான ஒரு இடைக்கால ஏற்பாடே இட ஒதுக் கீடு. எல்லோருக்கும் கல்வியும் வேலையும் உத் தரவாதமாக்கப்படும் வரை சமத்துவத்திற்கான போராட்டம் தொடரவே செய்யும். இட ஒதுக்கீடு எவரும் தருகிற சலுகையல்ல. மறுக்கப்பட்ட வாய்ப் புகளை பெறுவதற்கான, போட்டிக்கு தயாராவதற் கான அடிப்படை உரிமை. இது மட்டுமே போதுமான தல்ல. ஆனால், நிச்சயம் அவசியமானது. அப்போது தான் வாய்ப்பும் அதன்மூலம் வாழ்வும் மறுக்கப்பட்ட வர்கள் சமூக நீரோட்டத்தில் இதரரோடு சமவாய்ப் பில் போட்டியிடுவதற்கான அடிப்படை அதாவது வாய்ப்பில் சமத்துவம்.

April 01, 2007

நீதிமன்ற தீர்ப்புகள் : அன்றும்-இன்றும்

உலகமயமாக்கல் கொள்கை யால் விவசாயம், தொழில், கல்வி, சுகா தாரம், தொழிலாளர் நலம் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து நாட்டு மக்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர், ஆசிரி யர்கள் போராடும்போது இவர்களை ஒடுக்க மத்திய - மாநில அரசுகள் தனது நிர்வாகத்தையும் போலீசையும் பயன்படுத்துகிறது.

நீதிமன்றமும் உலகமயமாக்கல் கொள் கைக்கு ஆதரவாக தனது தீர்ப்புகளை வாரி வழங்கி வருகிறது.

உலகமயமாக்கலுக்கு (1990க்கு) முன் தீர்ப்புகள்

1. போனஸ் என்பது கொடுபடா ஊதியம் ஆகும்.

2. விசாரணையற்ற வேலைநீக்கம் தவறானது.

3. பொதுத் துறைகள் தேசத்திற்கு தேவையானது.

4. வேலை நிறுத்த உரிமை உண்டு.

5. சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

6. தவறான பணி நீக்கம் செய்யப் பட்ட ஊழியருக்கு தொடர் பலன் களுடன் வேலை, வேலையிழந்த நாட்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.

7. ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒரு நிறுவனம் ரத்து செய்யும் போது, அதில் பணியாற்றும், ஒப்பந்த தொழிலாளர்கள், தானா கவே நிரந்தர ஊழியர்கள் ஆகி விடுவார்கள்.

உலகமயமாக்கலுக்கு (1990க்கு) பின் தீர்ப்புகள்

1. அரசு ஊழியர், ஆசிரியருக்கு வேலை நிறுத்த உரிமையில்லை.

2. ஆர்ப்பாட்டம், பேரணி, பந்த், வேலைநிறுத்தம் போன்ற ஜன நாயக நடவடிக்கைகளுக்கு தடை.

3. நிரந்தர ஊழியருக்கு இணை யாக, தினக்கூலி ஊழியரை கருத முடியாது.

4. ஒப்பந்த ஊழியர்கள், நிரந்தர ஊழியருக்கு இணையாக சம ஊதியம் உரிமை கோர முடியாது.

5. ‘தொழிலாளர் நலன்’ என்பது தொழிலாளிக்கு மட்டும் சொந்த மாகவுள்ளது. சட்டத்தில் ‘முதலாளி நலன்’ பற்றியும் இடம் பெற வேண்டும்.

6. அதிகாரியிடம் வார்த்தை மீறி பேசியதற்கு செய்த வேலை நீக் கம் சரியானது.

7. சிறிய தவறுகளுக்கு கூட (பணி யிடத்தில் தூங்கியதற்காக) பணி நீக்கம் செய்தது சரியானது.

8. பொதுத்துறை பால்கோ நிறுவ னம் தனியார்மயம் நியாயமா னது.9. டெல்லி நகரில் மின்சாரம், குடிநீர் விநியோகம் தனியாருக்கு கொடுத்தது சரியானது தான்.

10. தற்காலிக ஊழியருக்கு சேமநல நிதி திட்டம், ஈஎஸ்ஐ திட்டம் கிடையாது.

11, தற்காலிக ஊழியரை, பணி நிரந் தரம் செய்ய, வயதுதளர்வு செய்ய தேவையில்லை.

12. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழி யர் மீண்டும் பணியில் சேர்க் கப்பட்டால், இடைப்பட்ட காலத் திற்கு பணி காலமாக கருதி ஊதியம் வழங்க தேவையில்லை. பணிதொடர் ஆணையும் வழங்க தேவையில்லை.

13. சட்ட விரோத வேலை நிறுத்தத் தில் ஈடுபடும் ஊழியர்களை பணி நீக்கம் செய்யலாம்.

14. பணி நிரந்தரம் செய்ய தொடர் ந்து 240 நாட்கள் பணி புரிந்தது பற்றி சம்பந்தப்பட்ட ஊழியரே நிரூபிக்க வேண்டும். நிர்வாகம் அல்ல. (ஆனால் ஆவணங்கள் அனைத்தும் நிர்வாகத்திடமே உள்ளன).

15. ஒரு நிறுவனம் ஒப்பந்த தொழி லாளர் முறையை ரத்து செய்தால், அதில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டியதில்லை.

16. ஆண்டுக்கணக்கில் தினகூலி, தற்காலிக ஊழியர்களாக பணி புரிந்தாலும், நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமல்ல.

17. நிர்வாகம் யாரை வேண்டு மானாலும் நேரடியாக வேலைக்கு நியமிக்கலாம், நீக்கலாம்.

18. “சமவேலைக்கு சம ஊதியம்” என்பதை இயந்திர ரீதியாக பார்க்கக் கூடாது.

19. தொழிலில் ஏற்படும் பிரச்சனை களை தொழிலாளர் கோணத் தில் இருந்து மட்டும் பார்ப்பது சரியில்லை. தொழில் நடத்தும் முதலாளி கோணத்திலும் பார்க்க வேண்டும்.

20. தனியார் சுய நிதி கல்லூரிகளில் இட ஒதுக்கீடு செய்து உத்தர விட்ட அரசு உத்தரவை ரத்து செய்தது.

21. ஒப்பந்த அடிப்படையில் நியமிக் கப்பட்ட 1880 கம்ப்யூட்டர் ஆசிரி யர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்து உத்தரவிட்டது. ‘இவர்களுக்கு முன்னுரிமை வழங்கி பணி நிரந்தரம் செய்ய தேவையில்லை’ என கூறி அரசு உத்தரவை ரத்து செய்தது.

March 08, 2007

பின் நீ என்ன கடவுள்?

என்னென்னவோ நடக்கிறது பூமியில்.
பின் நீ என்ன கடவுள்?"
மனிதனின் கேள்வி உரத்து ஓலித்தது.
கடவுள் நேரில் வந்தான்,
"இப்படி நேரில் வந்துதான் உன்னை நீ
நிருபிப்பாயெனில்,
பின் நீ என்ன கடவுள்?"
மனிதனின் அடுத்த கேள்வி.
கடவுள் இப்போது வாய்திறந்தான்:
"என்னால் எதையும் சரிப்படுத்த முடியும்."
"எதுவும் வந்தபிறகு சரிப்படுத்துவாயோ?
வருமுன் காக்க முடியாதெனில்,
பின் நீ என்ன கடவுள்?"
மனிதன் மறுபடி கேட்க
மறைந்தே போனான் கடவுள்.

அ.குமரேசன்.
தீக்கதிர்

February 08, 2007

எப்பொழுது விடியல்?, எங்கே விடியல்?

ரவன்தாபாய் காம்பளே தன் ஆறு வயது மகனிடம் பேசி பல மாதங்கள் ஆகிறது, புரிபாயின் நிலையும் இதுவே.இது மகராஸ்ட்ரா மாநிலத்தின் கோண்டியா மாவட்டத்தில் வசிக்கும் பல நுறு பெண்களின் அவலநிலை. இவர்களால் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே வீட்டில் கழிக்கமுடிகிறது , அதுவும் நடு இரவில். வாரத்திற்கு 1000 கி.மீ. மேல் பிரயாணம் செய்ய வேண்டியுள்ளது வெறும் 30 ரூபாய் ஒரு நாளைக்கு சம்பாதிக்க.

இவர்கள் ஒன்றும் கிரமத்திலிருந்து நகரத்திற்க்கு குடிபெயரும் அகதிகள் அல்ல, ஒரு காலத்தில் நகர்புரத்தில் பீடி தொழிற்சாலைகளில் வேலைப்பார்த்து, அத்தொழில் நசிந்ததால் அறுகாமயில் இருக்கும் கிராமங்களில் விவசாய கூலிகளாக வேலை தேடி அலையும் ஏழைகள், தினமும் 20 மணி நேரத்தை தன் வீட்டை விட்டு வெளியே கழிக்கும் பரிதாபத்துக்குரியவர்கள்.


இப்பெண்களின் ஒரு நாள் வேலை பளுவை சற்றே பார்ப்போம்.


விடிகாலை நான்கு மணிக்கே எழுந்து குழ்ந்தைகள் துங்கும்பொழுதே வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, ஐந்து அல்லது அதற்கு மேற்ப்பட்ட கி.மீட்டர் நடந்தால் ரயில் நிலையத்தை அடையலாம். பசியிலும் அரை தூக்கத்திலும் ரயிலின் துறு ஏறிய தரையில் அமர்ந்து இரண்டு மணி நேரம் - 78 கி.மீ பயணித்தால் சல்வா கிராமத்தை 9 மணிக்கு அடையலாம், இங்கு பசி அமர ஒரு விவசாய வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு.


இவர்கள் ரயிலில் பயணச்சீட்டு எடுப்பதேயில்லை , அப்படி எடுக்கும் பட்சத்தில் இவர்களது தினக்கூலியான 30 ரூபாய்க்கு மேல் தேவைப்படும். ஒரே ஆறுதல் பயணச்சீட்டு சோதிப்பாளர். இவருக்கு தெரியும் இப்பெண்களால் பயணச்சீட்டு எடுக்க இயலாது என்று. அகப்படும் வேலைகளில் 5 ரூபாய் லஞ்சமாக பெற்றுக்கொண்டு விட்டுவிடுவார்.


சல்வா கிழக்கு விதார்பாவில் உள்ள சிறிய கிராமம். பிரச்சனைக்குரிய B.T காட்டன் பகுதியை விட்டு சற்று தொலைவே உள்ளது என்றாலும் இங்கும் உலகமயமாக்கலின் தாக்கம் கடுமையாகவே உள்ளது. இங்கு பெண்கள் பெரும்பாலும் களைப் பிடுங்கவே ஈடுபடுத்தப்படுகிறார்கள்.


மாலை 5.30மணி வரை வேலைப் பார்த்தபின் 3 அலலது 4கி.மீ வயல்வேளியில் நடந்தால் மறுபடியும் ரயில் நிலையம். ஆனால் ரயில் இரவு 8 மணிக்குதான் வரும். இரண்டு மணி நேரம் பயணித்து, ஒரு மணி நேரம் நடந்தால் இரவு 11மணிக்கு மேல் வீட்டை அடைந்தால் குடும்பத்தினர் அனைவரும் அவரவர் வேலைக் களைப்பில் அயர்ந்து துங்குவதையே கானலாம்.


நான்கு மணி நேரம் தூக்கம் ஆட்க்கொண்டால் மறுபடியும் காலை 4 மணி, தூங்கும் குழந்தைகள், நடைப்பயணம், ரயில், வேலை ........... வாழ்க்கை சக்கரம் சுழல தொடங்கும்.


வெறும் 30 ரூபாய் பெற 170 கி.மீட்டகள் பிரயானித்து தன் வாழ்க்கையை தொலைக்கும் இப்பெண்களின் வாழ்வில் எப்பொழுது விடியல்?,எங்கே விடியல்?.

நன்றி பி.சாயநாத், தி ஹிந்து.


January 15, 2007

நாராயணமூர்த்தியின் கனவு ( உளறல் )


“இந்தியாவிலுள்ள வறுமையை ஒழிக்க முதலாளித்துவமே ஒரே வழி” என்று திருவாய் மலர்ந்துள்ளார் இன்போசிஸ் நாராயணமூர்த்தி. அதோடு நிற்கவில்லை.“அந்த ஒரு விஷயம்தான் நமக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது” என்றும் கூறியுள்ளார்.சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில்தான் இவ்வாறு குறிப்பிட்டார்.


முதலாளித்துவத்தால் வறுமை தீர்ந்து விட்டது என்று ஒரு நாட்டை உதாரணமாகக் காட்டியிருந்தால் அவர் கூறுவது நம்பும்படியாக இருந்திருக்கும்.

2000ல் வறுமையில் வாழும் அமெரிக்க குடிமக்களின் எண்ணிக்கை 3 கோடியாக இருந்தது. 2005ல் அந்த எண்ணிக்கை 3 கோடியே 70 லட்சமாக அதிகரித்துள்ளது.வறுமையால் வாடுபவர்களில் 1 கோடியே 30 லட்சம் பேர் குழந்தைகளாவர். இது அமெரிக்க அரசு தரும் அதிகாரப்பூர்வ தகவலாகும். இவர் கூறும் முதலாளித்துவத்தின் தலைமையகத்துடைய லட்சணமே இது தான். இந்தியாவை விட பணம் அதிகம் புழங்கும், மக்கள் தொகை குறைவாக உள்ள அமெரிக்காவுக்கே இந்தக் கதியென்றால் நமக்கு கட்டுப்படியாகுமா?


கம்யூனிசத்தை நடைமுறைப்படுத்திய அனைத்து நாடுகளும் தோற்று விட்டன என்று குற்றம் சாட்டியுள்ளார்.“பார்த்தீர்களா...கம்யூனிச நாடுகளில் வாழ்க்கைத்தரம் எப்படி இருந்தது?தற்போது முதலாளித்துவத்தை நடைமுறைப்படுத்தியவுடன் அந்நாட்டு மக்களின் வாழ்க்கை பிரமாதமாக உள் ளது”என்று கூறியிருந்தால் கேட்பவர்களுக்கு நம் பிக்கையை ஊட்டியிருக்கும்.சோஷலிச அமைப்பு சிதைக்கப்பட்ட பிறகு ரஷ்யாவிலும் சரி, கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சரி, பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைத்தரம் சீரழிந்துள்ளது என்பதுதானே உண்மை!



அமெரிக்காவின் சட்டவிரோதத் தடைகளையும் மீறி சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளில் கியூபா பெரும் சாதனைகளைச் செய்தது சோச லிசத்தினால்தானே? வெறும் 1.9 சதவீதத்தினர் தான் அங்கு வேலைவாய்ப்பின்றி
இருக்கின்றனர். கம்யூனிசம் தோல்வியுறவில்லை.



“முந்தைய சமூகங்களுக்குச் சிறிதும் குறையாத அளவில் இன்றைய முதலாளித்துவச் சமூகம்,மக்களில் மிகவும் அதிகமான பெரும்பான்மையினரைச் சிறு பான்மையினர், மேன்மேலும் குறைந்து கொண்டிருக்கிற சிலர் சுரண்டுவதற்காகப் பயன்படுத்து கின்ற பகட்டான நிறுவனமே (முதலாளித்துவம்) என்பது அம்பலப்படுத்தப்பட்டுவிட்டது” என்று ஏங்கெல்ஸ் கூறியது இன்றைக்கும் பொருந்தக் கூடியதாகத்தான் இருக்கிறது.



லத்தீன் அமெரிக்க நாடுகளில் நவீன பொருளாதாரக் கொள்கைகளையும், முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழுந்து வருவது முதலாளித்துவத்தின் வெற்றி என்று நாராயணமூர்த்தி கருதிக்கொள்கிறாரா?



ஆட்குறைப்பு உரிமை தேவை என்று கோரிக்கை வைத்துள்ளார். சமூகத்தின் மீது எவ்வளவு அக்கறை பாருங்கள். கோடிக் கணக்கானோர் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கும் இடத்தில் ஆட்குறைப்பு உரிமைகோரும் நாராயண மூர்த்தியின் கவனம் தன் சகாக்களின் லாபத்தைச் சுற்றியே வருகிறது. அது சரி, குருட்டுக் கழுதைக்கு இருட்டைப் பற்றி என்ன கவலை?



அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையுமே தனியார் மயமாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். நேருவின் நவீன இந்தியாவின் ஆலயங்களில் ஒன்றான பொதுத்துறை நிறுவனத்தில் இளம் பொறியாளராக பணியில் அமர்வது தனது கனவாக இருந்தது என்று 2000ல் அளித்த பேட்டியில் தெரிவித்தவர் இந்த நாராயணமூர்த்தி (ஆதாரம் -இந்தியா-செமி னார்.காம்).அந்த ஆலயங்களைத்தான் கரசேவை நடத்தி சின்னாபின்னமாக்கத் துடிக்கத் தொடங்கியிருக்கிறார்.



கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு, தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் அளப்பரிய சாதனைகளைச் செய்த சோசலிசத்தின் மீது இவரை 60 மணி நேரம் விசாரித்ததால் (பல்கேரியாவுக்கு பயணம் செய்தபோது) வெறுப்பு ஏற்பட்டு விட்டதாம். நமது நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரை நிர்வாணமாக்கி சோதனையிட்டார்களே. ஞாபகமிருக்கிறதா நாராயணமூர்த்தி அவர்களே?. 60 மணி நேர விசாரணை உங்களை முதலாளித்துவவாதியாக மாற்றியது நியாயம் என்றால், நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரை காட்டுமிராண்டித்தனமாக அமெரிக்க அரசு நிர்வாணமாக்கியது ஒன்றே போதுமே, இந்த நாடு முழுவதும் இடதுசாரி மயமாவதற்கு.



நாசகரப் பாதையில் இந்தியா செல்ல வேண்டும் என்ற ஆசையோடு, அவ்வாறு செல்வது விரைவு படுத்தப்பட வேண்டும் என்ற அவசரம் அவரது குரலில் தெரிகிறது.



நான் மனதால் முதலாளித்துவவாதி. இதயத்தால் சோசலிசவாதி என்று ஒரு பேட்டியில்(தி இந்து, 3.7.06) கூறியவர்தான் இந்த நாராயணமூர்த்தி. பணம் வந்தவுடன் இதயத்தைப் பறி கொடுத்து விட்டார் போலும். தூக்கம் கலைந்ததால் ஏற்பட்ட உளறல் போலத் தெரியவில்லை. வேஷம் கலைந்த தாகவே படுகிறது.

January 05, 2007

BJP யும் பதவிவெறியும்

றுபடியும் மூன்று வறுடங்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக ராஜ்நாத்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.ஆர்‍எஸ்‍எஸ்-ன் ஆசியுடன் அயோத்தியில் கோவில், பொது சிவில் சட்டம் மற்றும் 370வது பிரிவை நீக்குதல் போன்றவை மீண்டும் பிரதான கோஷங்களாக எழும் முயற்சி நடந்து வருவது ஆச்சரியத்தைத் தரவில்லை.


மேலும், சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாகவும் கூறியுள்ளனர்.இதற்காக 2026ஆம் ஆண்டை காலக்கெடுவாகவும் குறித்துள்ளனர்.


சில மாதங்களுக்கு முன் யார் அந்த ராஜ்நாத்சிங் என்று கேட்குமளவுக்கு இருந்த அவர்,தற்போது நாட்டின் பிரதமருக்கான போட்டியில் களத்தில் இறங்கியுள்ளார்.போட்டியிலிருந்து விலகிக் கொள்வது பற்றி அத்வானியும் முடிவெடுக்கவில்லை. இந்த பட்டியலில் வாஜ்பாயின் பெயரும் உள்ளது, தேர்தலில் இனி போட்டியிடப் போவதில்லை என்று அவர் கூறியிருந்தது பதிவு செய்யப்பட்ட ஒன்று.


2009ஆம் ஆண்டில் வாஜ்பாயும், அத்வானியும் 80 வயதைக் கடந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் பிரதமர் பதவிக்கு தனக்குப் போட்டியாக வேறு யாறும் இருக்கப் போவதில்லை என்ற கணக்கில்தான் ராஜ்நாத்சிங் தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ளார். ஆர்‍எஸ்‍எஸ்-ம் அவருக்கு தனது முழு ஆதரவை அளிக்கும். இதனால்தான் சர்ச்சைக்குரிய மூன்று பிரச்சனைகளையும் ராஜ்நாத்சிங் முன்வைத்துள்ளார்.


ராஜ்நாத்சிங் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.இந்துத்துவா என்பது வாக்குகளைப் பெற்றுத் தருவதில் ஒரு குறிப்பிட்ட அளவே பலன் தரும். அவர் முன் நிறுத்தும் மூன்று விஷயங்களையும் ஆட்சியில் இருந்தபோது கிடப்பில் போட்டிருந்தது அவருக்கு நினைவிருக்கும். தற்போது பதவி நாற்காலி தொலை தூரத்தில் இருக்கும்போது, கோவில் அங்கேயே கட்டுவோம் என்ற பாடலை அவர் தயக்கமில்லாமல் பாடலாம்.ஆனால் 2009ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்.



- 'தி இந்து ' தலையங்கத்தின் (டிச.26) பகுதிகள்.


January 02, 2007

நீதியின் படுகொலை

இராக்கின் எண்ணெய் வளத்தை களவாடுவதற்காக, பொய்யான புகார்களைகூறி அந்த நாட்டை ஆக்கிரமித்த அமேரிக்க - பிரிட்டன் அரக்க அரசுகள் அந்த நாட்டின் நீதித்துறையையும் ஆக்கிரமித்தது. அந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்த சதாம் உசேனை கைது செய்து விசாரனை என்ற பெயரில் வெட்கம்
கெட்ட முறையில் நாடகம் ஒன்றை நடத்தினர். இதன் கடைசிக் காட்சியாக சதாம் உசேனை தூக்கில்போட்டு தனது வெறித்தனத்தின் கோரமுகத்தை ஏகாதிபத்தியம் வெளிப்படுத்தியுள்ளது. 'ஏகாதிபத்தியம் மனித குலத்தின் விரோதி' என்று மாமேதை லெனின் கூறியதான் மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் அமேரிக்க ஏகாதிபத்தியத்தின் திமிர் தனத்தை ப.ஜ.க வைத் தவிர ஏனைய கட்சிகள் அனைத்தும் கண்டித்துள்ளன.


இராக்கை ஆக்கிரமித்ததில் தொடங்கி,சதாம் உசேன் தூக்கிலிட்டு கொல்லப்பட்டது வரை ஐ.நா. சபை நடந்துக்கொண்ட விதம், அது ஒரு உலக அமைப்பு என்ற நம்பகத்தன்மையை இழந்து அமேரிக்காவின் கைப்பாவை என்ற எண்ணத்தையே ஏற்படுத்துக்கிறது.


ஆனால் நம் மத்திய அரசு , ஏமாற்றமளிக்கிறது, துரதிருஷ்டவசமானது என்ற வார்த்தைகளுடன் தனது வருத்தத்தை முடித்துக்கொண்டது, அமேரிக்காவின் மனம் நோகாமல் நடந்து கொள்ளவேன்டும் என்ற எண்ணத்தையே இது வெளிப்படுத்துகிறது.


இராக்கில் இன்று நடந்தது உலகின் எந்த நாட்டிலும் இனி நடக்கக்கூடாது.


வல்லரசு நாடுகளை எதிர்த்து வளர்முக நாடுகள் ஓரணியில் திரள வேண்டிய அவசியத்தை இராக் துயரம் எடுத்துக் காட்டியுள்ளது.


உலகப்பந்தை அமேரிக்க ஓநாய் கபளீகரம் செய்ய அனுமதிக்ககூடாது.