June 02, 2007

பாஜக அரசின் மக்கள் விரோத போக்கு

பாரதிய ஜனதா கட்சியின் அரசு என்பது மக்கள் பிரச்சனைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காது என்பதற்கு மேலும் ஒரு உதாரணமாகத் தான் ராஜஸ்தான் சம்பவங்கள் உள்ளன.

இம்மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான குஜ்ஜார் இனமக்கள் தங்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து விலக்கி பழங்குடியின மக்கள் பட்டி யலில் சேர்க்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதற்காக கடந்த ஓராண்டு காலமாகப் போராடியும் வருகின்றனர்.

2003 ஆம் ஆண்டு ராஜஸ்தான் சட்டப்பேர வைக்கு கடந்த தேர்தலில் குஜ்ஜார் இன மக்களை பழங்குடி இனப்பட்டியலில் சேர்ப்பதாக பாஜக வாக் குறுதி அளித்திருக்கிறது.கடந்த 4 ஆண்டுகளாக தந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் இப்போது நேரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக தேர்தல் அறிக்கையில் இப்படி எந்த வாக் குறுதியும் அளிக்கவில்லை என்று ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தராராஜேயும் அம்மாநில உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கட்டாரியாவும் அடித் துப் பேசுகிறார்கள். இது அச்சடித்த வாக்குறுதியாக இல்லாமல் இருக்கலாம். மேடைப்பேச்சுகளில் அளித்ததாகவும் இருக்கலாம் என்று பட்டிமண்டபம் நடத்திக் கொண்டிருக்கும் நேரமல்ல இது.

மக்களின் கோரிக்கையில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பதுதான் கேள்வி. குஜ்ஜார் இன மக்களின் வாழ்நிலைப்படி அவர்களை எஸ்.டி.யாக அறிவிப்பதில் தவறில்லை என்பதால்தான் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பணி வேகத்தில் நடப்பதால்தான் மக்கள் தங்களின் எதிர்ப்பைக் காட்ட அணிதிரண்டுள்ளனர். மூன்று மாவட்டங்களில் நடந்த போராட்டத்தில் சுமார் இரண்டு லட்சம் பேர் திரண்டிருந்தனர் என்றால் அவர்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சரோ உயர் நிலை அதிகாரியோ பேசியிருக்க வேண்டாமா என்ற கேள்வி நியாயமானது.

ஆனால்,மக்கள் ஒன்று பட்டு உரிமை கேட்பதை பாஜக அரசு விரும்புவதில்லை. ஏற்கெனவே ராஜஸ் தானில் ஏழை சிறுவிவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் பாசனத்திற்காகத் தண்ணீர் கோரி முற்றுகைப்போராட்டம் நடத்தினார்கள். இதனை சகித்துக் கொள்ள முடியாத பாஜக அரசு காவல் துறையை ஏவி கடுமையாகத் தாக்குதல் நடத்தி விவசாயிகளை படுகொலை செய்தது. விவ சாயிகள் மீது ஏற்கெனவே பாஜக அரசினால் ஏவி விடப்பட்ட போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், பாஜகவினர் கொஞ் சம் கூட வெட்கமில்லாமல் நந்தி கிராமத்தில் நடந்த நிகழ்வுகளை ஊதி பெரிதாக்கி அவதூறு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இப்போது அதையும் மிஞ்சி பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 14 பேரை பலி வாங்கியுள்ளது. மக்கள் பிரச்சனை மீதான பாஜக அரசின் அலட்சியப் போக்கை அராஜக அணுகுமுறையை இந்த சம்பவங்கள் காட்டுகின்றன. இந்த கட்சி மத்தி யில் ஆண்ட போதும் மற்ற சில மாநிலங்களில் ஆட்சி செய்த போதும் மக்கள் விரோதப் போக்கை கடைப்பிடித்ததால்தான் ஆட்சிக்கட்டிலிலிருந்து அகற்றப்படும் நிலை ஏற்பட்டது. இருந்தாலும் அதிலி ருந்து பாஜக பாடம் கற்றதாகத் தெரியவில்லை. இந்தக் கட்சிக்கு நிச்சயமாக எதிர் காலத்தில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள். இந்த துப்பாக்கிச் சூடு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும். பலி யானோர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

No comments: