April 29, 2007

மனிதர் மலத்தை மனிதர் சுமக்கும் கொடுமை நீடிக்கலாமா?

தமிழகம் முழுவதும் துப்புரவு பணி யில் சுமார் ஒன்றரை லட்சம் தொழிலா ளர்கள் வேலை செய்து வருகின்றனர். பெரும்பாலான தொழிலாளர்கள் தாழ்த் தப்பட்ட மக்கள் ஆவர்.திண்டுக்கல் மாவட்டத்தில் மூன்று நகராட்சி,24 பேரூராட்சிகள், 306 ஊராட்சிகளில் சுமார் ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின் றனர். மனித மலத்தை மனிதன் கை யால் எடுத்து, தலையால் சுமக்கும் நிலையை 1995ம் ஆணடு தடை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணைய மும், இது மனித உரிமை மீறல் எனக் கூறியுள்ளது. ஆனால், அதன்பின்பும் இந்நிலை இந்தியாவின் பல மாநிலங்க ளிலும் தமிழகத்திலும் தொடர்வது சுதந்திர இந்திய நாட்டில் அவக்கேடான நிலையாகும்.
மலம் அள்ளும் பணியில் அருந்ததியர் மக்கள் தான் ஈடுபடுத்தப்படுகின் றனர் என்ற செய்தி நமது நாட்டிற்கே தலைக் குனிவை ஏற்படுத்துவதாகும்.கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரண்ட் லைன் என்ற ஆங்கில ஏடு ஆய்வு செய்து இந்திய நாட்டின் அவமா னம் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கட்டுரையில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித் துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அகரம்,தாடிக் கொம்பு,அம்மையநாயக்கனூர், ஆயக்குடி ஆகிய பேரூராட்சிகளில் நவீன கழிப்பறை இல்லாமல் எடுப்புக் கழிப்பறையில் மனித மலத்தை மனி தன் அள்ளும் நிலை உள்ளதாக மார்க் சிஸ்ட் கட்சி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பெரும்பாலான கிராமங் களிலும், சேரிப் பகுதிகளிலும், நகரங் களில் தெரு ஓரங்களில் உள்ள மலத்தை அள்ளும் பணியில் துப்புரவு தொழிலா ளர்கள் குறிப்பாக,அருந்ததியர் பெண் கள் ஈடுபடுத்தப்படுவதாக தெரியவந் துள்ளது. பழனி நகராட்சியில் 15 முதல் 24 வார்டுகள் வரையுள்ள பகுதிகளி லும், திண்டுக்கல்லில் கவாடக்காரத் தெரு, ஆர்.வி. நகர், காமராஜபுரம், லைன் தெரு, செல்லாண்டியம்மன் கோவில் தெரு, பிள்ளையார் பாளையம், கக்கன் நகர், திருமலைச்சாமிபுரம் ஆகிய பகுதி களில் உள்ள கணிசமான வீடுகளில் எடுப்பு கழிப்பறைகள்தான் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேற்குவங்க அரசு ஒரு விரிவான திட்டத்தை வகுத்து அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து அதனை முறையாக செயல்படுத்தி மனித மலத்தை மனி தன் அகற்றும் கொடுமையை அறவே தடுத்து நிறுத்தியுள்ளதை இம்மாநாடு பெருமையோடு சுட்டிக்காட்டுகிறது.

தமிழக அரசு ஆளுநர் உரையில் மனித மலத்தை மனிதன் சுமக்கும் கொடுமைக்கு முடிவு கட்டப்படும் என அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் இதனை முடிவுக்கு கொண்டு வர போதுமான நிதி ஒதுக்கப்பட வில்லை என்பதும் கவலை அளிக்கிறது.

உலகின் வேறு எந்த நாட்டிலும் இல் லாத சமூகக் கொடுமைதான் மனித மலத்தை மனிதனே கையால் அள்ளும் நிலையாகும். சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்களை இதில் இருந்து விடுவிப்பது அவசர அவசியமான கட மையாகும். தமிழ்நாட்டில் தீண்டாமை இல்லை. மனித மலத்தை மனிதன் சுமக்கும் கொடுமை இல்லை. சமூக ஒடுக்குமுறை இல்லை என்ற பெரு மையை நிலை நாட்டுவதை தமிழக அரசு உருவாக்க வேண்டும். இதற்காக முயற்சியையும், திட்டங்களையும் அவ சரத் தன்மையும் உருவாக்குமாறு தமி ழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள் கிறது. இந்த இழி நிலையை முடிவுக்கு கொண்டு விரைந்து செயல்பட முன்வரு மாறு அனைத்து ஜனநாயக இயக்கங் களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகிறது.

No comments: