April 14, 2007

இட ஒதுக்கீடு - 27 சதம் - நீதிமன்றம் - திறமை வங்கி

க.கனகராஜ், தூத்துக்குடி

இந்திய அரசியல் சட்டத்தின் 16(14) வது பிரிவு பிற்பட்ட வகுப்பினருக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்கிறது. மண் டல் கமிஷன் பரிந்துரைக்கு முன்னரும் பிற்பட்ட வகுப்பினருக்கும் பல்வேறு மாநிலங்களிலும் இட ஒதுக்கீடு இருந்தே வந்தது. மண்டல் கமிஷன் பரிந் துரையை அமல்படுத்துவதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் 27 சதம் பிற்பட் டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க தீர்ப்பளித்தது. அது அமல்படுத்தப்பட்டு வருகிறது. பிற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியாக உயர்நிலை (ஊசநயஅல டயலநச) யிலுள்ளோருக்கு இவ்வொதுக் கீடு பொருந்தாவண்ணம் 27 சதம் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது.

27சதம் ஏன்?

1931க்குப் பிறகு ஜாதி ரீதியான கணக்கெடுப் புகள் நாடு முழுவதும் நடைபெறவில்லை. ஆயினும் மண்டல் கமிஷன் இதர பிற்பட்டோரின் மக்கள் தொகை 52 சதம் எனக் கணக்கிட்டுள்ளது. சுதந் திரத்திற்குப் பிறகு சர்தார் வல்லபாய் படேல் ஜாதி ரீதியான கணக்கெடுப்பைத் தடை செய்துவிட்டார். ஆயினம் பல மாநிலங்கள் தாங்களே இதர பிற்பட் டோர் பட்டியலைத் தயார் செய்து அதன் அடிப் படையில் இடஒதுக்கீட்டை கல்வியிலும் கூட அமல் படுத்தி வந்தன. இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டும் விரிவாக தயாரிக்கப்பட்ட கேள்வித் தாள் அடிப்படையிலுமே மண்டல் கமிஷன் இதர பிற்பட்டோர் 52 சதம் தரப்பட்டிருக்க வேண்டும். ஆயினும், நீதிமன்றம் இட ஒதுக்கீடு ஒட்டுமொத் தமாக 50 சதத்தை மீறக்கூடாது என தடை விதித்த தால் ஏற்கெனவே தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு (15+7.5) 22 சதம் இடஒதுக்கீடு அமலில் இருப்பதால் இதர பிற்பட்டோருக்கு 27 சதம் (கூட்டுத் தொகை 50க்குள்) என்று முடிவு செய்யப்பட்டது.

யாருக்கு என்ன வேலை?

ஜனநாயகத்தின் மூன்று பிரிவுகளான நாடாளு மன்றம், நிர்வாகம், நீதித்துறை இவற்றின் பணிகள் அரசியல் சட்டத்தால் தெளிவாக வரையறுக்கப்பட் டுள்ளன.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள் - சட்டங்களை உருவாக்கும்

நிர்வாகம் - உருவாக்கப்பட்ட சட்டத்தை அமல்படுத்தும்.

நீதிமன்றம் - சட்டத்தை வியாக்கியானம் செய்யும், அமலாக்கத்தை கண்காணிக்கும்.

சமீபகாலமாக நீதிமன்றம் இதர பிரிவுகளின் அதிகாரங்களை தானே எடுத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளதற்கான பல்வேறு உதார ணங்களைச் சொல்ல முடியும். நாடாளுமன்றத்தின் அதிகாரத்தில் தலையிட்டது அரசியல் சட்டத்தின் 9வது அட்டவணையில் உள்ளவையும் நீதித்துறை யின் பரிசீலனைக்குரியதே என்பது நிர்வாகத்தின் தலையீட்டில் கடைசி உதாரணம் உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் 27 சதம் இட ஒதுக்கீட்டிற்கு தடை.

இட ஒதுக்கீட்டிற்கு தடை சரியா?

1. உச்சநீதிமன்றத்தின் 9 பேர் கொண்ட பெஞ்ச் வேலை வாய்ப்பில் 27 சதம் இதர பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை அனுமதித்துள்ளது. வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அனுமதிப்போம். அதற்கு அடிப்படையான கல்வியில் அனுமதிக்க மாட்டோம் என்பது என்ன நியாயம்? கல்வி நிறுவ னங்களில் மாணவர் சேர்க்கையில் இடஒதுக் கீட்டை தடை செய்துள்ளது இருவர் கொண்ட பெஞ்ச்.

2. 27 சதம் இதர பிற்பட்ட வகுப்பினர் உள்ள னரா என்ற கேள்வி நியாயமெனில் எத்தனை சதவீ தம் உள்ளனரோ அத்தனை சதவீதமல்லவா இட ஒதுக்கீடு அனுமதிக்க வேண்டும். அதற்கு மட்டும் 50 சதம் என்கிற அடக்குமூடி எதற்கு?

3. 27சதம் வேலையில் இட ஒதுக்கீட்டை அனு மதித்திருப்பதும் உச்சநீதிமன்றம்தானே?

4. நாடாளுமன்றம் ஏறத்தாழ ஏகமனதாக (அர சியல் சட்ட திருத்தம் 93 அரசியல் சட்டத்தில் 15 (5) பிரிவை புதிதாக உருவாக்கியது. இதை நீதி மன்றம் கேள்விக்குள்ளாக்குமெனில் நாடாளு மன்றம் சட்டமன்றங்களின் வேலை என்ன?

இவையெல்லாம் நீதிமன்றம் அரசின் இதர அங்கங்களின் அதிகாரத்தில் தலையிடுவது என் பது மட்டுமல்ல. பணக்காரர்களுக்கும் முதலாளி களுக்கும் ஆதரவாக சேவகம் செய்ய முனைந் துள்ளதன் வெளிப்பாடே.

எனவேதான் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு தேசிய நீதி ஆணையம் வேண்டும் என வலி யுறுத்தியுள்ளது. நீதி ஆணையத்தின் உறுப்பினர் களாக பணியிலிருக்கும் நீதிபதிகள் மட்டும் இருந் தால் போதாது என வலியுறுத்தியுள்ளது.

இட ஒதுக்கீட்டை

எதிர்ப்போரின் வாதம்

வாதம் 1

நாட்டை சாதியாக பிரிவுபடுத்தும் நடவடிக்கை.

நியாயம் 1

இந்த வாதம் அபத்தமானது. நாட்டு மக்கள் எந்த அடிப்படையில் பின் தங்கியுள்ளனரோ அந்த அடிப்படையில்தானே நிவாரண நடவடிக்கை மேற் கொள்ள முடியும். பொருளாதார வரம்பு மட்டம் வைத்தால் ஏழை, பணக்காரன் என்ற பிரிவை உருவாக்காதா? வடகிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது நாட்டை பூகோள அடிப் படையில் பிளவுபடுத்தி விடுமா?

வாதம் 2

வாக்கு வங்கிக்காகவே இட ஒதுக்கீடு, நாங்கள் திறமை வங்கிக்காக வாதிடுகிறோம்.

நியாயம் 2

நல்ல வார்த்தை ஜாலம், உயர்கல்வி நிறுவனங் களில் படித்தோர் எத்தனை சதம் இந்திய அரசு நிறு வனங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரிகின்றனர். பெரும்பாலும் அன்னிய நாட் டிலும் இந்தியாவில் அன்னிய நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும்தானே பணிபுரிகின் றனர். அங்கெல்லாம் இட ஒதுக்கீடே கிடையாதே? எனவே இந்தக் கேள்வி தனக்கு போட்டி வரக் கூடாது என்பதற்காகத்தானே தவிர போட்டியில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு சலுகையளித்து தங் கள் வாய்ப்பு பறிக்கப்படும் என்பதால் அல்ல.

இவர்கள்தானே வேலைவாய்ப்பில் இட ஒதுக் கீடு அமல்படுத்தப்பட்டபோது முதலில் கல்வியில் ஒதுக்கீடு செய், பின்னர் வேலைவாய்ப்பில் செய்ய லாம் என்றவர்கள்.

இன்னும் சொல்லப்போனால் இப்போது பொதுப் போட்டியில் சேர்வோருக்கான எண்ணிக்கை குறைக்கப்படாமலேயே இட ஒதுக்கீடு அமல்படுத்த வகை செய்யப்பட்டிருக்கிறது. போட்டிக்கு புதியவர் கள் வருகிறார்கள் என்பதைத் தவிர ஏற்கெனவே போட்டியிடுவோர் போட்டியிலிருந்து நீக்கப்படுவது என்கிற பிரச்சனையே எழவில்லையே.

இதற்கு ஏதுவாகவே மத்திய அரசு கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது. குறிப்பாக, உயர் கல்விக்கு 34 சதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டவர் களுக்கான ஒரு இடைக்கால ஏற்பாடே இட ஒதுக் கீடு. எல்லோருக்கும் கல்வியும் வேலையும் உத் தரவாதமாக்கப்படும் வரை சமத்துவத்திற்கான போராட்டம் தொடரவே செய்யும். இட ஒதுக்கீடு எவரும் தருகிற சலுகையல்ல. மறுக்கப்பட்ட வாய்ப் புகளை பெறுவதற்கான, போட்டிக்கு தயாராவதற் கான அடிப்படை உரிமை. இது மட்டுமே போதுமான தல்ல. ஆனால், நிச்சயம் அவசியமானது. அப்போது தான் வாய்ப்பும் அதன்மூலம் வாழ்வும் மறுக்கப்பட்ட வர்கள் சமூக நீரோட்டத்தில் இதரரோடு சமவாய்ப் பில் போட்டியிடுவதற்கான அடிப்படை அதாவது வாய்ப்பில் சமத்துவம்.

No comments: