நீதிமன்ற தீர்ப்புகள் : அன்றும்-இன்றும்
உலகமயமாக்கல் கொள்கை யால் விவசாயம், தொழில், கல்வி, சுகா தாரம், தொழிலாளர் நலம் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து நாட்டு மக்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர், ஆசிரி யர்கள் போராடும்போது இவர்களை ஒடுக்க மத்திய - மாநில அரசுகள் தனது நிர்வாகத்தையும் போலீசையும் பயன்படுத்துகிறது.
நீதிமன்றமும் உலகமயமாக்கல் கொள் கைக்கு ஆதரவாக தனது தீர்ப்புகளை வாரி வழங்கி வருகிறது.
உலகமயமாக்கலுக்கு (1990க்கு) முன் தீர்ப்புகள்
1. போனஸ் என்பது கொடுபடா ஊதியம் ஆகும்.
2. விசாரணையற்ற வேலைநீக்கம் தவறானது.
3. பொதுத் துறைகள் தேசத்திற்கு தேவையானது.
4. வேலை நிறுத்த உரிமை உண்டு.
5. சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
6. தவறான பணி நீக்கம் செய்யப் பட்ட ஊழியருக்கு தொடர் பலன் களுடன் வேலை, வேலையிழந்த நாட்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.
7. ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒரு நிறுவனம் ரத்து செய்யும் போது, அதில் பணியாற்றும், ஒப்பந்த தொழிலாளர்கள், தானா கவே நிரந்தர ஊழியர்கள் ஆகி விடுவார்கள்.
உலகமயமாக்கலுக்கு (1990க்கு) பின் தீர்ப்புகள்
1. அரசு ஊழியர், ஆசிரியருக்கு வேலை நிறுத்த உரிமையில்லை.
2. ஆர்ப்பாட்டம், பேரணி, பந்த், வேலைநிறுத்தம் போன்ற ஜன நாயக நடவடிக்கைகளுக்கு தடை.
3. நிரந்தர ஊழியருக்கு இணை யாக, தினக்கூலி ஊழியரை கருத முடியாது.
4. ஒப்பந்த ஊழியர்கள், நிரந்தர ஊழியருக்கு இணையாக சம ஊதியம் உரிமை கோர முடியாது.
5. ‘தொழிலாளர் நலன்’ என்பது தொழிலாளிக்கு மட்டும் சொந்த மாகவுள்ளது. சட்டத்தில் ‘முதலாளி நலன்’ பற்றியும் இடம் பெற வேண்டும்.
6. அதிகாரியிடம் வார்த்தை மீறி பேசியதற்கு செய்த வேலை நீக் கம் சரியானது.
7. சிறிய தவறுகளுக்கு கூட (பணி யிடத்தில் தூங்கியதற்காக) பணி நீக்கம் செய்தது சரியானது.
8. பொதுத்துறை பால்கோ நிறுவ னம் தனியார்மயம் நியாயமா னது.9. டெல்லி நகரில் மின்சாரம், குடிநீர் விநியோகம் தனியாருக்கு கொடுத்தது சரியானது தான்.
10. தற்காலிக ஊழியருக்கு சேமநல நிதி திட்டம், ஈஎஸ்ஐ திட்டம் கிடையாது.
11, தற்காலிக ஊழியரை, பணி நிரந் தரம் செய்ய, வயதுதளர்வு செய்ய தேவையில்லை.
12. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழி யர் மீண்டும் பணியில் சேர்க் கப்பட்டால், இடைப்பட்ட காலத் திற்கு பணி காலமாக கருதி ஊதியம் வழங்க தேவையில்லை. பணிதொடர் ஆணையும் வழங்க தேவையில்லை.
13. சட்ட விரோத வேலை நிறுத்தத் தில் ஈடுபடும் ஊழியர்களை பணி நீக்கம் செய்யலாம்.
14. பணி நிரந்தரம் செய்ய தொடர் ந்து 240 நாட்கள் பணி புரிந்தது பற்றி சம்பந்தப்பட்ட ஊழியரே நிரூபிக்க வேண்டும். நிர்வாகம் அல்ல. (ஆனால் ஆவணங்கள் அனைத்தும் நிர்வாகத்திடமே உள்ளன).
15. ஒரு நிறுவனம் ஒப்பந்த தொழி லாளர் முறையை ரத்து செய்தால், அதில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டியதில்லை.
16. ஆண்டுக்கணக்கில் தினகூலி, தற்காலிக ஊழியர்களாக பணி புரிந்தாலும், நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமல்ல.
17. நிர்வாகம் யாரை வேண்டு மானாலும் நேரடியாக வேலைக்கு நியமிக்கலாம், நீக்கலாம்.
18. “சமவேலைக்கு சம ஊதியம்” என்பதை இயந்திர ரீதியாக பார்க்கக் கூடாது.
19. தொழிலில் ஏற்படும் பிரச்சனை களை தொழிலாளர் கோணத் தில் இருந்து மட்டும் பார்ப்பது சரியில்லை. தொழில் நடத்தும் முதலாளி கோணத்திலும் பார்க்க வேண்டும்.
20. தனியார் சுய நிதி கல்லூரிகளில் இட ஒதுக்கீடு செய்து உத்தர விட்ட அரசு உத்தரவை ரத்து செய்தது.
21. ஒப்பந்த அடிப்படையில் நியமிக் கப்பட்ட 1880 கம்ப்யூட்டர் ஆசிரி யர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்து உத்தரவிட்டது. ‘இவர்களுக்கு முன்னுரிமை வழங்கி பணி நிரந்தரம் செய்ய தேவையில்லை’ என கூறி அரசு உத்தரவை ரத்து செய்தது.
No comments:
Post a Comment