-பேராசிரியர் கே. ராஜு
நம் நாட்டு அணுஉலைகளுக்கு யுரேனியம் கிடைப்பதில் பற்றாக்குறை இருக்கிறது. இந்தக் காரணத்தைச் சொல்லியே பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் போன்றோர் உடனடியாக அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்திற்குச் செல்வதுதான் யுரேனியம் கிடைப்பதற்கு ஒரே வழி என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மற்றொரு புறம் நமது அணுசக்தித் துறை உலைகளுக்குத் தேவையான யுரேனியத்தைப் பெறுவதற்கு எல்லாவிதங்களிலும் முயற்சி எடுத்து வருகிறது. அதற்குப் பலனும் கிடைக்கத் தொடங்கியுள்ளது.
அணுசக்தித் துறையின் கீழ் உள்ள அரசு கனநீர் குழுமம் (ழநயஎல றுயவநச க்ஷடியசன) பாஸ்ஃபோரிக் அமிலத்திலிருந்து யுரேனியத்தைப் பிரித்து எடுப்பதற்கான ஒரு தொழில்நுட்ப ஆலையை நிறுவ உள்ளது. டிராம்பேயில் உள்ள ராஷ்ட்ரீய கெமிக்கல்ஸ் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் பாஸ்பேட் பாறையிலிருந்து (சடிஉம யீாடிளயீாயவந) பாஸ்ஃபோரிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது.
கடல்நீரிலிருந்தும் அணுக்கழிவிலிருந்தும் மரபணு உயிரியல் முறைகளைப் பயன்படுத்தி யுரேனியத்தைத் திரும்பப் பெறும் முயற்சியிலும் கணிசமான முன்னேற்றம் அடைந்திருப்பதாக பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
அணுசக்தித் துறையின் கீழ் உள்ள மற்றொரு அரசு நிறுவனமான இந்திய ரேர் எர்த் நிறுவனமும் (ஐனேயைn சயசந நுயசவா டுவன) பாஸ்ஃபோரிக் அமிலத்திலிருந்து யுரேனியத்தைப் பிரித்தெடுக்கும் ஆலைகளை நிறுவ இருக்கிறது. அது மட்டுமின்றி, தோரியம் ஹைட்ராக்ஸைடிலிருந்தும் உலோகத் தயாரிப்புக் கழிவுகளிலிருந்தும் யுரேனியம் பெறுவதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
போதுமான அளவு யுரேனியத்தை உற்பத்தி செய்தே தீருவது என்ற சவாலை கனநீர் குழுமம் ஏற்றுக் கொண்டுள்ளதால், கூடிய விரைவில் அணுஉலைகளுக்குத் தேவையான யுரேனியத்தைப் பெறமுடியும் என்ற சாதகமான நிலை தோன்றியுள்ளது. கூடுதல் அழுத்த கனநீர் உலைகளிலிருந்து (ஞசநளளரசளைநன ழநயஎல றுயவநச சுநயஉவடிசள) தற்போதைய இலக்கான 10,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமல்ல அதற்கும் அதிகமாகவே உள்நாட்டு வளங்களிலிருந்து உற்பத்தி செய்துவிட முடியும்.
கடல் நீரில் யுரேனியம் இருப்பது முன்பே தெரிந்த விஷயம்தான். ஆனால் கடல் நீரில் மிகக் குறைந்த விகிதத்தில் மட்டுமே இருக்கும் யுரேனியத்தைப் பிரித்தெடுக்கச் செலவு அதிகம் பிடிக்கும் என்பதால் இதுவரை அதில் முன்னேற்றம் இல்லாமலிருந்தது. தற்போது இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு பிரத்தியேகமான முறையில் தயாரிக்கப்படும் பாலிமர் வழியாகக் கடல் நீரை அனுப்பினால் யுரேனியத்தை மட்டும் உள்வாங்கிவிட முடியும் என பாபா ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்துள்ளது. கடல் நீரில் 4.6 பில்லியன் டன்கள் யுரேனியம் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த யுரேனியத்தை அதிக செலவின்றிப் பெற்றுவிட முடியும்.
அது சரி, ஒரு சந்தேகம். இதெல்லாம் சாதாரண மக்களான நமக்கே பத்திரிகைகள் மூலம் தெரியவந்துள்ளதே, மிக உயர் பதவியில் இருக்கும் மன்மோகன்சிங்கிற்கும் சூப்பர் விஞ்ஞானியாக நம் மக்களால் போற்றப்படும் அப்துல் கலாமிற்கும் தெரியாமலா இருக்கும்? பின் ஏன் யுரேனியத்தையும் அணுஉலைகளையும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டுமென்று துடிக்கிறார்கள்?
நம் நாட்டு விஞ்ஞானிகள் உயிரைக் கொடுத்து உழைக்கத் தயாராக இருக்கிறார்கள். அவர்களது உற்சாகத்தையெல்லாம் புறக்கணித்துவிட்டு, அமெரிக்காவுக்கு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்தே தீருவேன் என்று வறட்டுப் பிடிவாதம் பிடிக்கும் மன்மோகன்சிங்கிற்குப் பாடம் சொல்லித்தரப் போவது யார்?
நம் நாட்டு அணுஉலைகளுக்கு யுரேனியம் கிடைப்பதில் பற்றாக்குறை இருக்கிறது. இந்தக் காரணத்தைச் சொல்லியே பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் போன்றோர் உடனடியாக அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்திற்குச் செல்வதுதான் யுரேனியம் கிடைப்பதற்கு ஒரே வழி என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மற்றொரு புறம் நமது அணுசக்தித் துறை உலைகளுக்குத் தேவையான யுரேனியத்தைப் பெறுவதற்கு எல்லாவிதங்களிலும் முயற்சி எடுத்து வருகிறது. அதற்குப் பலனும் கிடைக்கத் தொடங்கியுள்ளது.
அணுசக்தித் துறையின் கீழ் உள்ள அரசு கனநீர் குழுமம் (ழநயஎல றுயவநச க்ஷடியசன) பாஸ்ஃபோரிக் அமிலத்திலிருந்து யுரேனியத்தைப் பிரித்து எடுப்பதற்கான ஒரு தொழில்நுட்ப ஆலையை நிறுவ உள்ளது. டிராம்பேயில் உள்ள ராஷ்ட்ரீய கெமிக்கல்ஸ் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் பாஸ்பேட் பாறையிலிருந்து (சடிஉம யீாடிளயீாயவந) பாஸ்ஃபோரிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது.
கடல்நீரிலிருந்தும் அணுக்கழிவிலிருந்தும் மரபணு உயிரியல் முறைகளைப் பயன்படுத்தி யுரேனியத்தைத் திரும்பப் பெறும் முயற்சியிலும் கணிசமான முன்னேற்றம் அடைந்திருப்பதாக பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
அணுசக்தித் துறையின் கீழ் உள்ள மற்றொரு அரசு நிறுவனமான இந்திய ரேர் எர்த் நிறுவனமும் (ஐனேயைn சயசந நுயசவா டுவன) பாஸ்ஃபோரிக் அமிலத்திலிருந்து யுரேனியத்தைப் பிரித்தெடுக்கும் ஆலைகளை நிறுவ இருக்கிறது. அது மட்டுமின்றி, தோரியம் ஹைட்ராக்ஸைடிலிருந்தும் உலோகத் தயாரிப்புக் கழிவுகளிலிருந்தும் யுரேனியம் பெறுவதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
போதுமான அளவு யுரேனியத்தை உற்பத்தி செய்தே தீருவது என்ற சவாலை கனநீர் குழுமம் ஏற்றுக் கொண்டுள்ளதால், கூடிய விரைவில் அணுஉலைகளுக்குத் தேவையான யுரேனியத்தைப் பெறமுடியும் என்ற சாதகமான நிலை தோன்றியுள்ளது. கூடுதல் அழுத்த கனநீர் உலைகளிலிருந்து (ஞசநளளரசளைநன ழநயஎல றுயவநச சுநயஉவடிசள) தற்போதைய இலக்கான 10,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமல்ல அதற்கும் அதிகமாகவே உள்நாட்டு வளங்களிலிருந்து உற்பத்தி செய்துவிட முடியும்.
கடல் நீரில் யுரேனியம் இருப்பது முன்பே தெரிந்த விஷயம்தான். ஆனால் கடல் நீரில் மிகக் குறைந்த விகிதத்தில் மட்டுமே இருக்கும் யுரேனியத்தைப் பிரித்தெடுக்கச் செலவு அதிகம் பிடிக்கும் என்பதால் இதுவரை அதில் முன்னேற்றம் இல்லாமலிருந்தது. தற்போது இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு பிரத்தியேகமான முறையில் தயாரிக்கப்படும் பாலிமர் வழியாகக் கடல் நீரை அனுப்பினால் யுரேனியத்தை மட்டும் உள்வாங்கிவிட முடியும் என பாபா ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்துள்ளது. கடல் நீரில் 4.6 பில்லியன் டன்கள் யுரேனியம் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த யுரேனியத்தை அதிக செலவின்றிப் பெற்றுவிட முடியும்.
அது சரி, ஒரு சந்தேகம். இதெல்லாம் சாதாரண மக்களான நமக்கே பத்திரிகைகள் மூலம் தெரியவந்துள்ளதே, மிக உயர் பதவியில் இருக்கும் மன்மோகன்சிங்கிற்கும் சூப்பர் விஞ்ஞானியாக நம் மக்களால் போற்றப்படும் அப்துல் கலாமிற்கும் தெரியாமலா இருக்கும்? பின் ஏன் யுரேனியத்தையும் அணுஉலைகளையும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டுமென்று துடிக்கிறார்கள்?
நம் நாட்டு விஞ்ஞானிகள் உயிரைக் கொடுத்து உழைக்கத் தயாராக இருக்கிறார்கள். அவர்களது உற்சாகத்தையெல்லாம் புறக்கணித்துவிட்டு, அமெரிக்காவுக்கு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்தே தீருவேன் என்று வறட்டுப் பிடிவாதம் பிடிக்கும் மன்மோகன்சிங்கிற்குப் பாடம் சொல்லித்தரப் போவது யார்?
No comments:
Post a Comment