July 05, 2008

பெட்ரோல் விலையும் பித்தலாட்ட கணக்கும்


-பி.வெங்கடேஷ்

“சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், இந்தியாவிலும், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலையை ஏற்ற வேண்டியுள்ளது” கீறல்விழுந்த ரிக்கார் டைப் போல் பிரதமரும், நிதியமைச்சரும், பெட் ரோலியத்துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சி தலைவர்களும் ஏன் தமிழ் மற்றும் ஆங்கில ஒளி மற்றும் அச்சு ஊடகங்களும் கூட இடைவிடா மல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். விலை உயர்வை தவிர்க்க இடதுசாரிகள் கொடுத்த ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை பரிசீ லிக்க மத்திய அரசு பிடிவாதமாக மறுத்துவிட் டது. ஜனநாயகத்திற்கு இடம் கொடுக்காத சந்தை அடிப்படைவாத உலகமய கொள்கையை மன்மோகன் சிங் அரசு அடிபிறழாமல் பின்பற் றுவதே இதற்கு அடிப்படைக் காரணம்.

விலை உயர்வை நியாயப்படுத்தி நாட்டு மக் களுக்கு பிரதமர் ஆற்றிய உரையில் ‘சர்வதேச மதிப்பில் கணக்கிட்டால் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.71க்கு விற்க வேண்டியிருக்கும். ஆனால் மக்கள் மேல் உள்ள அக்கறையின் காரணமாக ஐந்து ரூபாய் மட்டும் ஏற்றியிருக்கிறோம்’ என்று பேசியிருக்கிறார். இது சரியான பித்தலாட்டப் பேச்சாகும். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71 என்றால், ஒரு பீப்பாயின் விலை 256 டாலரா கிறது. ஆனால் கச்சா எண்ணெய் ஒரு பீப்பா யின் விலையே (இன்றைய விலையில்) 135 டாலர் தான். அப்படியானால் ஏறத்தாழ 121 டாலர் சுத்தி கரிப்பு செலவு என்றாகிறது. கச்சா எண்ணெய் யை சுத்திகரிக்க இத்தனை செலவு ஆகாது என் பதுதான் உண்மை. அப்படியெனில், பெட்ரோல் விலை நிர்ணயத்தில் செய்யப்படும் பித்தலாட் டம் என்ன என்று தெரிந்து கொள்ள வேண் டாமா?

ஆடு நனைகிறதே... ஐயோ!

‘இறக்குமதி சமன்பாடு’ (iஅயீடிசவ யீயசவைல) என்பதுதான் இந்த பித்தலாட்டத்தின் பின்புலம். இதுஒரு புறமிருக்க ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற பகாசுர நிறுவனங்களின் அகோர லாபப்பசிக்கு மக்களை இரையாக்குவதும் நடக் கிறது. கடந்த பாஜக ஆட்சியில், அரசே பெட்ரோ லிய பொருட்களின் விலையை நிர்ணயம் செய்யும் நடைமுறை மாற்றப்பட்டு, சர்வதேச சந்தை மதிப்பில் இனி விலை நிர்ணயிக்கும் முறை கொண்டுவரப்பட்டது. அதற்கு அடுத்த கட்டமாக ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க பாஜக அரசு முடிவெடுத்தது. இடதுசாரி கட்சிகளின் கடும் போராட்டத்தின் விளைவாகவும், நாடாளுமன்ற ஒப்புதல் தேவை என்ற உச்சநீதிமன்றம் வாஜ்பாய் அரசுக்கு ‘நச்’ சென்று குட்டு வைத்ததன் கார ணமாகவும் பொதுத்துறை எண்ணெய் நிறு வனங்களை தனியார்மயமாக்கும் முயற்சி தடுக் கப்பட்டது. அதன்பின்னர் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இடதுசாரிகளின் கடும் நிர்பந்தம் காரணமாக இந்த தனியார்மய முடிவினை அமலாக்க முடியவில்லை. ஆனால் அப்போது, தனியார்மயத்துக்கு ஆதரவாக அருண்ஷோரி & கம்பெனிக்கு முட்டுக்கொடுத்த ‘பெரிய மனிதர்கள்’ இப்போது பொதுத்துறை நிறுவனங்கள் அடைந்து வரும் நஷ்டத்திற்காக கண்ணீர் விடுகிறார்கள். ஆம், பொதுத்துறை ஆடு நனைகிறதே என்று தனியார் நரிகள் கவ லைப்படுகின்றன. அதனால்தான் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் ‘வருவாய் இழப் பை’ (ரனேநச சநஉடிஎநசநைள) ஈடுகட்ட பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்த வேண்டுமென ‘சுதந்திர சந்தை’ ஆதரவாளர்கள் கூக்குரலிடுகிறார்கள்.

புளுகுமூட்டையிலிருந்து

பூனை வெளியே வருது

இந்த விலையேற்றம் ஏன் என்ற கேள்விக் கான விடை. இப்போது தெரிகிறது. பூனைக் குட்டி புளுகு மூட்டையிலிருந்து வெளியே வந்து விட்டது. கோதாவரி- கிருஷ்ணா ஆற்றுப்படு கையில் இயற்கை எரிவாயுவை எடுக்கும் உரி மத்தை ரிலையன்ஸ் வைத்துள்ளது. கடந்த செப் டம்பர் 2007ல் ஒரு யூனிட் எரிவாயுவிற்கு 4.20 டாலர் என்று அரசு விலை நிர்ணயம் செய்ய ரிலையன்ஸ் நிர்பந்தித்தது. அப்போது சர்வதேச சந்தையில் பீப்பாய் ஒன்றுக்கு 60 டாலர். “கச்சா எண்ணெய் விலை ஏறியதால்” எரிவாயுவின் விலையை ரிலையன்ஸ் உயர்த்தியுள்ளது. இங்கேயே உற்பத்தியாகும் எரிவாயுவிற்கு, சர்வதேச மதிப்பில் விலை நிர்ணயிப்பார்களாம்! இதுதான் ‘இறக்குமதி சமன்பாடு’ எனப்படு கிறது. இந்தியாவின் பெட்ரோலியத் தேவையில் 20 முதல் 30 சதம் நம் நாட்டின் இயற்கை வளங்களிலிருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் பெரும்பகுதி ரிலையன்ஸ், எஸ்ஸார் நிறுவனங்களே ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் எடுக்கப்படும் எண்ணெய்க்கு இறக்குமதி விலை நிர்ணயித்து கொள்ளை லாபம் ஈட்ட ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற கம்பெனிகளுக்கு பேராசை இருக்கலாம், ஆனால் மத்திய அர சுக்கு மக்களைப் பற்றி கவலை வேண்டாமா?

ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் உள் நாட்டு தயாரிப்பை இறக்குமதி விலையில் விற் கையில் கிடைக்கும் கூடுதல் லாபத்தின் (றiனேகயடட யீசடிகவை) மீது வரி போடுங்கள் என்ற இடதுசாரி களின் கோரிக்கை நியாயமானதல்லவா? 9 சதவீதம் பொருளாதார வளர்ச்சி என்று வாய் கிழிய பேசுகிறீர்களே, அந்த வளர்ச்சியின் ஒரு பகுதியை மக்களின் சுமையை குறைக்க பயன்படுத்துங்கள் என்ற இடதுசாரிகளின் வலியுறுத்தல் நியாயமானதல்லவா? எடைக்கு வரி விதியுங்கள், அதன் விலைக்கு வரி விதிக் காதீர்கள்... அப்படிச் செய்தால் சர்வதேச விலை உயர்விலிருந்து மக்களை பாதுகாக்கலாம் என்ற இடதுசாரிகளின் ஆலோசனையை ஏற்பது அறிவுடைமையல்லவா? இதையெல் லாம் செய்யாமல் “சர்வதேச விலை உயர்வு” என்ற பித்தலாட்ட காரணத்தை மன்மோகன் சிங் அரசு மீண்டும் மீண்டும் சொல்லி மக்கள் தலையில் மிளகாய் அரைக்க நினைக்கிறது. அரைத்த மிளகாயின் காரம் அரசின் கண்களை நிச்சயம் கலங்கச் செய்யும்.

No comments: