மம்தா அரங்கேற்றி வரும் நாடகம்
-கி.இலக்குவன்
சிங்கூர் கார் தொழிற்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களைத் திருப்பித்தர வேண்டும் என்ற பெயரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்தலைவர் மம்தா பானர்ஜி மேற்கு வங்க அரசுக்கு எதிராக கடந்த 7 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்.இதற்காக ஆயிரக்க ணக்கான தனது ஆதரவாளர்களைத் திரட்டி தொழிற்சாலை நுழைவாயிலில் மறியல் போன்றவற்றை நடத்தி வரு கிறார்.தேசிய நெடுஞ்சாலையிலும் மறியலை நடத்தி போக்குவரத்தை நிலை குலையச்செய்துள்ளார். காவல்துறை தலையிடுவதற்கான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி வன்முறையைக்கட்டவிழ்த்து விட்டு ரத்தக்களறியை ஏற்படுத்தி துப் பாக்கிச்சூடு போன்றவைகளுக்கு வழி வகுப்பதன் மூலம் மேற்கு வங்க அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார்.
வெளியிலிருந்து திரட்டப்பட்ட பல்லாயிரம் பேருக்கு சாப்பாடு போடு வதற்காக ஒரு பெரிய சமையல் கூடமும் இயங்கி வருகிறது.கார் தொழிற்சாலைக்கு எதிரில் அமைந்துள்ள திடலில் 50 மீட்டர் தொiவில் இந்த தற்காலிக சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.சமையல் வேலையிலும் அவர்களுக்கு உதவி செய்யவும் சுமார் 50 பேர் பணியமர்த் தப்பட்டு உள்ளனர்.கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து வியாழன் வரையி லான 5 நாட்களில் காலை, மாலை இரு வேளைகளிலும் சுமார் 90000 பேர் உணவு அருந்தியுள்ளனர். தினமும் இரண்டரை லட்சம் ரூபாய் வீதம் இதுவரை பத்து லட் சம் ரூபாய்க்கு மேல் செலவிடப்பட் டுள்ளது. விடியற் காலை நான்கு மணிக் குத் துவங்கும் சமையல் வேலை அந்திசாயும் நேரம் வரை நீடிக்கிறது.
போராட்டக்காரர்களின் முகாம் ஒரு பெரிய திருவிழா நடைபெறும் இடம் போலக்காட்சி அளிக்கிறது. ரிக்ஷா ஓட்டி கள் பெரும் எண்ணிக்கையில் இயங்கி வருகின்றனர் பஸ் வேன்,கார் போன்றவை வருவதும் போவதுமாகக்காட்சி அளிக் கின்றன.ஐஸ்கிரீம் விற்பனையாளர்களுக் கும் நல்ல வியாபாரம் நடைபெற்று வருகிறது.
கையகப்படுத்தப்படாத நிலத்துக்காக நந்தி கிராமில் வன்முறையைத்தூண் டிவிட்டு 10க்கு மேற்பட்டவர்களின் மர ணத்துக்குக் காரணமாக இருந்தனர். இடது முன்னணிக்கு எதிராக நாடு தழுவிய அவதூறுப்பிரச்சாரத்தில் அப்போது ஈடுபட்டவர்கள் சிங்கூர் பிரச்சனை யைப் பெரிதாக ஊதிவிட்டு அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கிறார்கள். பிரச்ச னையைப் பேசித்தீர்க்கலாம் என்று மேற்கு வங்க முதல்வர் தெரிவித்து வரும் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றனர். நந்தகிராமம் பிரச்ச னையில் மேற்கு வங்க அரசு நிதானப் போக்கைக் கடைப்பிடிக்க தவறிவிட்ட தாக விமர்சனம் செய்த கவர்னர் கோபால கிருஷ்ண காந்தியும் பிற மனித உரிமைக் காவலர்களும் இப்போது எங்கே சென் றார்கள் என்று தெரியவில்லை.
சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு சிங்கூர் கார் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வரும் மம்தா கும்பலின் நடவடிக்கைகளை ப்பற்றி எதுவும் கூறாமல் அவர்கள் மவுனவிரதத்தைக் கடைப்பிடிப்பது ஏன் என்பது நடுநிலையாளர்கள் எழுப்ப வேண்டிய கேள்வி.
ஆதாரம் : ‘டைம்ஸ் ஆப் இந்தியா’
வெளியிலிருந்து திரட்டப்பட்ட பல்லாயிரம் பேருக்கு சாப்பாடு போடு வதற்காக ஒரு பெரிய சமையல் கூடமும் இயங்கி வருகிறது.கார் தொழிற்சாலைக்கு எதிரில் அமைந்துள்ள திடலில் 50 மீட்டர் தொiவில் இந்த தற்காலிக சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.சமையல் வேலையிலும் அவர்களுக்கு உதவி செய்யவும் சுமார் 50 பேர் பணியமர்த் தப்பட்டு உள்ளனர்.கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து வியாழன் வரையி லான 5 நாட்களில் காலை, மாலை இரு வேளைகளிலும் சுமார் 90000 பேர் உணவு அருந்தியுள்ளனர். தினமும் இரண்டரை லட்சம் ரூபாய் வீதம் இதுவரை பத்து லட் சம் ரூபாய்க்கு மேல் செலவிடப்பட் டுள்ளது. விடியற் காலை நான்கு மணிக் குத் துவங்கும் சமையல் வேலை அந்திசாயும் நேரம் வரை நீடிக்கிறது.
போராட்டக்காரர்களின் முகாம் ஒரு பெரிய திருவிழா நடைபெறும் இடம் போலக்காட்சி அளிக்கிறது. ரிக்ஷா ஓட்டி கள் பெரும் எண்ணிக்கையில் இயங்கி வருகின்றனர் பஸ் வேன்,கார் போன்றவை வருவதும் போவதுமாகக்காட்சி அளிக் கின்றன.ஐஸ்கிரீம் விற்பனையாளர்களுக் கும் நல்ல வியாபாரம் நடைபெற்று வருகிறது.
கையகப்படுத்தப்படாத நிலத்துக்காக நந்தி கிராமில் வன்முறையைத்தூண் டிவிட்டு 10க்கு மேற்பட்டவர்களின் மர ணத்துக்குக் காரணமாக இருந்தனர். இடது முன்னணிக்கு எதிராக நாடு தழுவிய அவதூறுப்பிரச்சாரத்தில் அப்போது ஈடுபட்டவர்கள் சிங்கூர் பிரச்சனை யைப் பெரிதாக ஊதிவிட்டு அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கிறார்கள். பிரச்ச னையைப் பேசித்தீர்க்கலாம் என்று மேற்கு வங்க முதல்வர் தெரிவித்து வரும் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றனர். நந்தகிராமம் பிரச்ச னையில் மேற்கு வங்க அரசு நிதானப் போக்கைக் கடைப்பிடிக்க தவறிவிட்ட தாக விமர்சனம் செய்த கவர்னர் கோபால கிருஷ்ண காந்தியும் பிற மனித உரிமைக் காவலர்களும் இப்போது எங்கே சென் றார்கள் என்று தெரியவில்லை.
சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு சிங்கூர் கார் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வரும் மம்தா கும்பலின் நடவடிக்கைகளை ப்பற்றி எதுவும் கூறாமல் அவர்கள் மவுனவிரதத்தைக் கடைப்பிடிப்பது ஏன் என்பது நடுநிலையாளர்கள் எழுப்ப வேண்டிய கேள்வி.
ஆதாரம் : ‘டைம்ஸ் ஆப் இந்தியா’